இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், 2-வது ஆட்டம் கேன்டர்பரி நகரில் நேற்று நடைபெற்றது. […]
தனியார் நிறுவன ஊழியர்களிடம் தகாத வார்த்தையில் பேசி, மிரட்டல் விடுத்த திமுக தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவைச் சார்ந்த தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா. இவர் கடந்த 2006 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் தாம்பரம் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் கடந்த 2021ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற […]
நியாயவிலைக் கடைகளில் ரேஷன் பொருட்கள் வாங்காதவர்கள் கௌரவ அட்டையை வாங்கி வைத்து கொள்ளலாம் என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் கல்லுக்குழி பகுதியில் உள்ள நியாயவிலை கடையில், தமிழ்நாடு கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அங்கு ரேஷன் பொருள் விநியோகம் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்த அவர், ரேசன் பொருட்கள் தேவையில்லை என்றால் அவர்களுக்கு கெளரவ அட்டை என்கிற முறை உள்ளது என்றார். இதனை […]
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. மொஹாலியில் நடைபெற்ற முதல் போட்டியில், டாஸ் வென்ற ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி பௌலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பேட்டிங்கில் […]
ஜெயலலிதாவின் உயிலை வெளியிடக் கோரி அவரது நினைவிடத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதிக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை மாங்காட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியரான சவுந்தரராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, தன்னை அழைத்து திருவேற்காடு, மாங்காடு, கரையாஞ்சாவடி, கோயம்பேடு பகுதிகளில் உள்ள நிலங்களில் வீடுகள் ஏற்படுத்தும்படி கூறியதாகவும், அதன் அடிப்படையில் வீடுகள் […]
பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் சிங் மான், அதிக அளவு குடிபோதையில் தள்ளாடியதால் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டதாக சிரோன்மணி அகாலிதளம் தலைவர் சுக்பிர் சிங் பாதல் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் சிங் மான், சமீபத்தில் அம்மாநிலத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி சென்றிருந்தார். அவர் அங்கிருந்து டெல்லிக்கு தாமதமாக திரும்பியதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இதுகுறித்து ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள சிரோன்மணி அகாலிதளம் தலைவர் சுக்பிர் சிங் […]
சம்பளம் கேட்ட கார் ஓட்டுனரை டிராவல்ஸ் நிறுவன பெண் ஊழியர்கள் கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் சுவாமி விவேகானந்தர் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் ராகுல் என்ற தனியார் டிராவல்சில் கார் டிரைவராக பணியாற்றி வருபவர் தினேஷ். இவருக்கு மே மற்றும் ஜூன் மாதத்திற்கான சம்பளப் பணம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், ராய்ப்பூர் விமான நிலையம் அருகே […]
’விடுதலை’ படத்திற்காக சமீபத்தில் அமைக்கப்பட்ட ரூ.10 கோடி மதிப்பிலான ரயில் மற்றும் ரயில்வே பாலத்தின் செட், இப்படத்தின் பிரம்மாண்டத்தைக் கூட்டியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி முதன்மை கதாபாத்திரத்திலும், விஜய் சேதுபதி வாத்தியார் கதாபாத்திரத்திலும் நடிக்கும் ’விடுதலை’ திரைப்படம் இரண்டு பாகங்களாகத் தயாராகிறது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் இப்படத்தினை பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாகத் தயாரிக்கிறார். சூரி நாயகன் என்பதில் […]
கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியின் சீரமைப்பு பணிகளை காவல்துறையினர் பாதுகாப்போடு மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் படித்து வந்த 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை 13ஆம் தேதி உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், ஜூலை 17ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி உயிரிழப்புக்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறி பள்ளி […]
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், தேர்தல் பொறுப்பாளர் சவுரவ் கோகாய், மேலிட பொறுப்பாளர்கள் தினேஷ் குண்டு ராவ், சிரிவெல்ல பிரசாத், ப.சிதம்பரம், திருநாவுக்கரசர் எம்.பி., தங்கபாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், அனைத்து காங்கிரஸ் […]