தனது 7 வயதில் இருந்து 2-வது தந்தையின் உறவினர்கள் தன்னை தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்ததை 28 ஆண்டுகள் கழித்து கணவனின் உதவியுடன் பெண் ஒருவர் வெளிக்கொண்டு வந்துள்ளார். முன்னாள் ராணுவ அதிகாரியின் மனைவியான 35 வயதுடைய அப்பெண் 19 வயது வரை தனக்கு நேர்ந்த கொடூரங்கள் குறித்து போலீசிடம் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தின் அலிகார் மாவட்டத்தில் அரங்கேறியிருக்கிறது. முதலில் காவல்துறையை அணுகிய போது புகாரை ஏற்றுக் […]
மூன்றாம் ஏசி எக்கனாமி வகுப்புகளிலும் படுக்கை விரிப்புகளை வழங்க இந்தியன் ரயில்வே முடிவு செய்துள்ளது. ரயில் பயணிகளுக்காக பல்வேறு சலுகைகள், வசதிகள் உள்ளிட்டவை அவ்வப்போது செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், மூன்றாம் ஏசி எக்கனாமி வகுப்புகளுக்கான டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மூன்றாம் ஏசி எக்கனாமி வகுப்புகளிலும் படுக்கை விரிப்புகளை வழங்க இந்தியன் ரயில்வே முடிவு செய்துள்ளது. ஏற்கனவே இதுவரை இந்த வகுப்பில் படுக்கை விரிப்புகள் வழங்கப்படாமல் இருந்து வந்தது. […]
தன்னை விட்டு பிரிந்து 2-வது திருமணம் செய்த கணவரை அவரது முதல் மனைவி மின் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கி செருப்பு மாலை அணிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டம் ஸ்வர்ணபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அகிலா (28). இவருக்கும் ஸ்ரீகாந்த் (33) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது அகிலாவின் பெற்றோர் ஸ்ரீகாந்துக்கு வரதட்சணையாக ரூ.20 லட்சம் கொடுத்துள்ளனர். இவர்களுக்கு […]
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என ராஜஸ்தான் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம், அம்மாநில முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அசோக் கெலாத் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முக்கியமான தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு அவை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில், முக்கிய முடிவாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும், காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் […]
சர்வதேசப் பொருளாதாரம் 1970-ஆம் ஆண்டுக்கு பிறகு மந்த நிலையை நோக்கி செல்வதாகவும், தற்போதே அதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கிவிட்டதாகவும் உலக வங்கியின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த சர்வதேச அளவில் மத்திய வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தி வருகின்றன. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தி வருகின்றன. இதனால், பணப்புழக்கத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் பணவீக்கம் குறையும் என இந்த நாடுகள் […]
சீனாவில் படிகங்களால் நிரப்பப்பட்ட இரண்டு ராட்சத டைனோசர் முட்டைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சீனாவின் அன்ஹுய் மாகாணத்தின் கியான்ஷான் பகுதியில் பீரங்கி குண்டு அளவிலான 2 டைனோசர் முட்டைகள் கிடைத்துள்ளன. இதுகுறித்த தகவல்கள் பழங்கால புவியியல் இதழில் வெளியாகியுள்ளன. இவை டைனோசர்கள் காலத்தின் இறுதிக் காலமான கிரெட்டேசியஸ் காலத்தைச் சேர்ந்த முட்டைகள் என்பது தெரியவந்துள்ளது. அந்த முட்டைகள் இரண்டும் கிட்டத்தட்ட முழுமையான கோளவடிவிலேயே இருக்கின்றன. முட்டைகளின் அளவு, ஓடுகளின் இறுக்கமான அமைப்பு […]
ஐபிஎல் முதலிய உள்நாட்டு கிரிக்கெட்டில் புதிய விதிமுறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கும் பிசிசிஐ, சோதனை முறையாக சையத் முஸ்தாக் கோப்பை தொடரில் TACTICAL SUBSTITUTE முறையை அறிமுகப்படுத்த உள்ளது. இக்கால கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டும் வகையிலும், போட்டிகளின் சுவாரசியத்தை அதிகப்படுத்தும் நோக்கிலும் பல்வேறு அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், உள்நாட்டு 20 ஓவர் கிரிக்கெட் தொடரான சையத் முஸ்தாக் கோப்பை கிரிக்கெட் தொடரில் TACTICAL SUBSTITUTE முறை அறிமுகப்படுத்தப்பட […]
இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது பிறந்த நாளை குடும்பத்தினருடன் புர்ஜ் கலிஃபாவிற்கு கீழே கொண்டாடியுள்ளார். இயக்குநர் விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதிகள், திருமணத்திற்கு பிறகு வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் இன்று தனது 37-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால் அவருக்கு ரசிகர்கள், திரையுலகைச் சேர்ந்த பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், நயன்தாராவை திருமணம் செய்து கொண்ட பிறகு கொண்டாடப்படும் முதல் பிறந்தநாள் […]
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 61-வது படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் ரஞ்சித் மற்றும் விக்ரம் ஆகியோர் தங்களின் மற்ற படங்களின் பணிகளை முடித்துள்ள நிலையில், விக்ரம் நடிக்கும் 61-வது படத்தை விரைவில் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘பொன்னியின் செல்வன்’, ‘கோப்ரா’ படங்களை அடுத்து, விக்ரம் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக தகவல் […]
விருகம்பாக்கத்தில் திரைப்பட கதாநாயகி கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விருகம்பாக்கம் மல்லிகை அவன்யூ பகுதியில் வசித்து வந்தவர் பவுலின் ஜெசிகா. இவர் அதே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்துக் கொண்டு சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி ‘வாய்தா’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இந்நிலையில், நேற்று மதியம் தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் […]