உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக திகழ்ந்த சீனா, தற்போது இந்தியாவின் மக்கள் தொகைக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் உள்ளது. ஒரு நாட்டின் அதிக மக்கள் தொகை அதன் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு பலமாக இருக்க முடியும் என்றாலும், சில ஆண்டுகளுக்கு முன் மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்த சீனா, இப்போது அதன் பிறப்பு விகிதம் அபாயகரமாக குறைந்து வருவதால், மக்கள் […]
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே மூங்கில்பாளையத்தில், நாளை மறுதினம் (டிசம்பர் 18) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். இந்த கூட்டத்திற்கு அனுமதி அளித்துள்ள காவல்துறை, சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக மொத்தம் 84 கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது. காவல்துறை விதித்துள்ள 84 நிபந்தனைகளில் முக்கியமாக, பொதுக்கூட்ட மேடை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துச் […]
வட இந்தியாவில் நிலவும் கடுமையான பனிமூட்டம் மீண்டும் ஒரு கோர விபத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி-ஆக்ரா விரைவுச் சாலையில் செவ்வாய்க்கிழமையான இன்று அதிகாலை ஏற்பட்ட தொடர் விபத்தில், 7 பேருந்துகள் மற்றும் 3 கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி தீப்பிடித்ததில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 150-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் அதிகாலை 4 மணியளவில், மதுராவில் உள்ள பல்தேவ் காவல் நிலையப் பகுதிக்கு […]
நடிகர் சிம்பு சமீபத்திய நேர்காணல் ஒன்றில், “இரவில் தூங்க செல்லும்போது லேசான பசியோடு தூங்கச் செல்வது அவசியம்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்தப் பழக்கம் குறித்து நிபுணர்கள் ஏன் வலியுறுத்துகிறார்கள், இதனால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதைப் பற்றிப் பார்க்கலாம். வயிறு முட்ட சாப்பிட்டால் என்ன ஆகும்..? இரவு நேரத்தில் வயிறு நிரம்பச் சாப்பிடும்போது, நமது உடலின் வளர்சிதை மாற்றங்கள் மெதுவாகச் செயல்படத் தொடங்கும். இதனால், உடலில் சேரும் கொழுப்புச்சத்து […]
தமிழர் பண்பாட்டில் மார்கழி மாதம் என்றால், வண்ண வண்ண கோலங்கள் தான் முதலில் நினைவுக்கு வரும். அதிகாலையில் பெண்கள் எழுந்து வீட்டு வாசலில் அழகான கோலங்களை இடுவது, பல நூறு ஆண்டு பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் ஒரு தொன்மையான வழக்கம். சங்க இலக்கியங்கள் முதல் 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள் வரை, பல இடங்களில் கோலம் போடும் பழக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கலாச்சாரப் பழக்கத்திற்குப் பின்னால், ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் ஏராளமான […]
தமிழர்களின் ஆன்மீக மாதமாக கருதப்படும் மார்கழி மாதம் இந்த ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி தொடங்கி ஜனவரி 14ஆம் தேதி வரை நீடிக்கிறது. சூரிய பகவான், குருவாகிய வியாழன் ஆளும் தனுசு ராசியில் தன் பயணத்தைத் தொடங்கும் இந்த மாதமே தனுர் மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் இந்துக்கள் திருமணம் போன்ற சுப காரியங்களை நடத்துவதில்லை. சுப நிகழ்ச்சிகளை தவிர்த்து, இறைவனின் அருளைப் பெறுவதற்கான வழிபாடுகள், மந்திர ஜபங்கள், […]
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த எதிர்பாராத குடும்ப நாடகம், அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2003-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட ராம் சிங் (50) மற்றும் உமா தேவி (45) தம்பதியினரின் வாழ்க்கை, 7 ஆண்டுகளாக தொடர்ந்த கள்ளக்காதல் ரகசியத்தால் தலைகீழாக மாறியது. இந்தத் தம்பதிக்கு 19 வயது மகள் பிரியா மற்றும் 16 வயது மகன் அர்ஜுன் இருக்கும் நிலையில், இந்தச் சம்பவம் […]
திருப்பத்தூர் மாவட்டம் புதூர்நாடு நடுக்குப்பம் பகுதியில், விவசாய நிலத்தில் ஒரு பெண் பலத்த காயங்களுடன் நிர்வாண நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர் சின்னகாளி (வயது 42) ஆவார். இவரது கணவர் சாம்பசிவம் 4 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவால் இறந்த நிலையில், இவருடைய பெண் குழந்தைகள் திருமணமாகி கணவர்களுடன் வசித்து வருகின்றனர். இதனால் தனியாக வசித்து வந்த சின்னகாளி, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் […]
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த சீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்குத் திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. இவருடைய கணவர் பால் வியாபாரம் செய்து வந்தார். தினமும் அதிகாலை 5 மணிக்கு வியாபாரத்திற்குச் சென்றால், இரவு 10 மணிக்கே திரும்புவார். இந்தக் கால அவகாசத்தில், சீதாவுக்கு எதிர் வீட்டில் வசித்த மோகித் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் நட்பாகத் தொடங்கிய இவர்களது பழக்கம், நாளடைவில் தகாத உறவாக மாறியது. இருவரும் […]
கனவுகளுடன் வாழ்ந்த 17 வயது சிறுமியின் வாழ்க்கை, இன்ஸ்டாகிராம் புகழ் மற்றும் ஒரு போதைக்கு அடிமையான காதலனால் நொடியில் நாசமான கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் பிரபலமாக வலம் வந்த ஆஷா பட்டேல், தனது அந்தரங்க வீடியோக்கள் இணையத்தில் வைரலானதால் ஏற்பட்ட தாங்க முடியாத வேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவத்திற்கு காரணமான 4 மருத்துவ மாணவர்களுக்கு மும்பை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. நடுத்தர […]

