கடந்த சில ஆண்டுகளாக, குறிப்பாக 40 முதல் 45 வயதிற்குட்பட்டவர்கள் மத்தியிலேயே திடீர் மரணங்கள் அதிகமாக நிகழ்கின்றன என்ற அதிர்ச்சித் தகவலை சமீபத்திய ஓர் ஆய்வு தரவுகளுடன் உறுதிப்படுத்தியுள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் நோயறிதல் மற்றும் தடயவியல் துறைகள் இணைந்து மேற்கொண்ட இந்த ஆய்வின் விரிவான முடிவுகள், இந்திய மருத்துவ ஆய்வுகள் இதழில் (ICMR) வெளியாகியுள்ளது. மே 2023 முதல் ஏப்ரல் 2024 வரை மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், மொத்தம் […]

அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணி, ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு’ என்ற பெயரில் இயங்கி வந்த நிலையில், தற்போது அந்தக் குழுவின் பெயரில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனிமேல் இந்த அமைப்பு அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் என்ற பெயரில் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு சார்பில், டிசம்பர் 23ஆம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை வேப்பேரி, ரிதர்ட்டன் […]

தமிழ்நாடு அரசின் கனவுத் திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டம் (KMUT) தற்போது இரண்டாம் கட்டமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே 1.13 கோடி பெண்கள் பயனாளிகளாக உள்ள இந்தத் திட்டத்தில், கூடுதலாக 17 லட்சம் பெண்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். சென்னையில் இத்திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி வைத்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மகளிர் உரிமைத்தொகை திட்டம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருப்பதாக தெரிவித்தார். மேலும், திராவிட மாடல் ஆட்சி பெண்களின் நலனுக்காக இன்னும் பல திட்டங்களைச் […]

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ ரேட் (வட்டி விகிதம்) குறைப்பைத் தொடர்ந்து, நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளான பாரத ஸ்டேட் வங்கி (SBI) மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) ஆகியவை தங்கள் கடன் வட்டி விகிதங்களை உடனடியாக குறைத்து அறிவித்துள்ளன. இந்த விகித குறைப்புகள் இன்று (டிசம்பர் 15) முதல் அமலுக்கு வருவதால், புதிய மற்றும் ஏற்கனவே கடன் வாங்கியவர்களின் மாதாந்திரத் தவணைகள் (EMIs) குறைந்து, கடன்கள் […]

உத்தப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில், திருமணமாகி 3 ஆண்டுகளாக கள்ளக்காதலனுடன் உறவில் இருந்த பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் நீலம் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இவருக்கும் ரவி என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக காதல் உறவு நீடித்து வந்துள்ளது. நீலம் அடிக்கடி தனது காதலன் ரவியுடன் தங்குவதற்காக வீட்டை விட்டு வெளியேறி வந்துள்ளார். இந்நிலையில், 3 நாட்களுக்கு முன்பு நீலம் மீண்டும் […]

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் ஆண்டியோகுவா மாகாணத்தில், பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று மலைப்பாதையில் இருந்து பள்ளத்தில் கவிழ்ந்த கோர விபத்தில், 17 பேர் உயிரிழந்தனர் மற்றும் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் எல் சிஸ்பெரோ என்ற கிராமப்புறப் பகுதியில் நடந்துள்ளது. ஆண்டியோகுவெனோ உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், தங்கள் பள்ளிச் சுற்றுலாப் பயணத்தை முடித்துக்கொண்டு, டோலூவிலிருந்து மெடலினுக்குத் திரும்பி வந்துள்ளனர். அப்போது, […]

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் அட்டை வைத்திருக்கும் ஒட்டுமொத்தப் பயனாளிகளுக்கும் புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம், இனிமேல் ஆதார் மையங்களுக்குச் செல்லாமல், வீட்டிலிருந்தபடியே மொபைல் எண், முகவரி, பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற முக்கிய விவரங்களை மாற்றியமைக்க முடியும். இந்தச் சேவைக்காகப் பயனாளிகள் ரூ.75 கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி, ஆதார் கார்டில் மொபைல் எண் அப்டேட் செய்யும் வசதி […]

தமிழ் மாதங்களில் மார்கழி மாதம் பெருமாள், சிவபெருமான் உள்ளிட்ட தெய்வங்களை வழிபாடு செய்வதற்குரிய மிகச் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. இந்த முப்பது நாட்களும் தொடர்ந்து திருப்பாவை, திருவெம்பாவை பாடி இறைவனை வழிபடுவதன் மூலம், நினைத்த காரியங்கள் விரைவில் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மார்கழியில் தவிர்க்க வேண்டியவை : புதிய கட்டுமானங்கள் மற்றும் கிரகப்பிரவேசம் : புதிய வீட்டிற்குக் குடியேறுதல் (கிரகப்பிரவேசம்), வீடு கட்டும் பணிகளைத் துவங்குதல் போன்றவற்றைச் செய்யக்கூடாது. […]

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அ.தி.மு.க. அங்கம் வகித்துப் பலமான வியூகங்களை அமைத்து வருகிறது. இருப்பினும், கட்சியின் உட்கட்சிப் பூசல் தொடர்ந்து நீடிப்பதால், எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளின் குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. அதிமுக-வை ஒருங்கிணைக்க வேண்டும் என்று குரல் கொடுப்பவர்கள் தொடர்ந்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வரும் சூழல் உள்ளது. சமீபத்தில், அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன் […]

நமது பாரம்பரிய ஆன்மீக வழிபாட்டு முறைகள் மற்றும் சடங்குகளுக்கு பின்னால் ஆழமான அறிவியல் காரணங்கள் உள்ளன. மதம் மற்றும் அறிவியல் ஆகியவை ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்தவை என்பதற்கான பல சான்றுகளை நமது பாரம்பரிய பழக்கவழக்கங்கள் வழங்குகின்றன. நாம் இன்று கடைப்பிடிக்கும் பல மரபுகள், அன்றைய காலத்தின் நுட்பமான சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரப் புரிதலை மறைத்திருக்கின்றன. அத்தகைய முக்கியமான நடைமுறைகளில் ஒன்றுதான், கோயில் குளங்களில் நாணயங்களை வீசும் பழக்கம். இன்றைய […]