கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஒரு கல்குவாரியில் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தவர் மஞ்சுநாத் (45). இவருக்கு மனைவியுடன் 13 மற்றும் 10 வயதில் இரண்டு மகள்கள் மற்றும் தாயார் உள்ளனர். மதுப் பழக்கத்திற்கு அடிமையான மஞ்சுநாத், அடிக்கடி வீட்டில் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. சமீப நாட்களாக மஞ்சுநாத் தனது மகள்கள் இருவரையும் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே அடைத்து வைத்திருந்துள்ளார். பின்னர், மீண்டும் பள்ளிக்கு வந்த சிறுமிகளிடம் ஆசிரியர்கள் விசாரித்தபோது, […]

உத்தரப்பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில், அத்தைக்கும் மருமகனுக்கும் இடையே ஏற்பட்ட காதல், இறுதியில் திருமணத்தில் முடிந்துள்ளது. இந்த விநோதச் சம்பவம் இரு குடும்பங்களிடையே பெரிய சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், காவல் துறையின் சமரச முயற்சியால் இறுதியில் திருமணம் அரங்கேறியது. ஜகன்னாத்பூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ண குமார் (24) என்ற இளைஞர் கூலி வேலை செய்து வருகிறார். சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு, இவர் சித்ரகூட் மாவட்டத்தில் உள்ள தனது தாய்வழிப் […]

கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட பஞ்சாபி பெண் ஒருவர், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொடூரமாக கொலை செய்துவிட்டு, நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் ரூபிந்தர் கவுர் என்ற பெண்ணிடமிருந்து பஞ்சாப் காவல்துறையினருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில், தனது கணவர் குர்விந்தர் சிங், தங்கள் வீட்டில் நடந்த கொள்ளைச் சம்பவத்தின்போது கொலை செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார். இதையடுத்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், […]

தெலுங்கு திரையுலகில் குணச்சித்திர நடிகையாக வலம் வரும் ‘மிர்ச்சி’ மாதவி, சினிமா துறையில் தான் சந்தித்த மோசமான ‘காஸ்டிங் கவுச்’ அனுபவங்கள் குறித்து சமீபத்தில் மனம் திறந்து பேசியுள்ளார். பிரபாஸின் ‘மிர்ச்சி’ திரைப்படம் மூலம் பிரபலமான நடிகை மாதவி, ஒருமுறை தனக்கு வந்த அதிர்ச்சியூட்டும் அழைப்பு பற்றிப் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், “ஒரு நபர் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, ‘பிரகாஷ் ராஜுக்கு மனைவியாக நடிக்கும் முக்கியமான கதாபாத்திரம் உள்ளது. […]

ஒவ்வொரு படத்திற்காகவும் தனது தோற்றத்தை மாற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய நடிகர்களில் நடிகர் மாதவன் முக்கியமானவர். இவர் சமீபத்தில் ‘ராக்கெட்ரி – நம்பி விளைவு’ படத்திற்காக அதிகரித்த உடல் எடையை, அதிவேகமாக, எந்தவொரு தீவிரப் பயிற்சியோ அல்லது உணவுப் பிற்சேர்க்கைகளோ (Supplements) இல்லாமல் குறைத்தது எப்படி என்ற ரகசியத்தை பகிர்ந்துள்ளார். ‘ராக்கெட்ரி’ திரைப்படத்திற்காக உடல் எடையை அதிகரித்திருந்த மாதவன், படப்பிடிப்பு முடிந்தவுடன் (2022-இல்) எடையைக் குறைக்கும் தேவை ஏற்பட்டது. இதுபற்றிப் பேசிய […]

தென்காசி மாவட்டம் ஊர்மேழகியான் கிராமத்தை சேர்ந்தவரும், செங்கோட்டை நீதிமன்ற வழக்கறிஞருமான முத்துக்குமாரசாமி (46), பகல் நேரத்தில் தனது அலுவலகத்திலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தென்காசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட முத்துக்குமாரசாமி, தென்காசி தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணியின் துணை அமைப்பாளராகவும் பதவி வகித்து வந்தார். போலீஸ் விசாரணையில், இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் என்பவரின் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரிய வந்தது. இந்தச் […]

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியில் இருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி, மீண்டும் தங்கள் தாய் கழகமான அ.தி.மு.க-வில் இணைந்து வருவது தமிழக அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில், அ.ம.மு.க-வில் முக்கியப் பொறுப்பு வகித்த மதுரை வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் ஆர். சுரேஷ் அ.தி.மு.கவில் தன்னை இணைத்துக் கொண்டார். அதிமுக-வின் அமைப்புச் செயலாளர் ராஜன் செல்லப்பா முன்னிலையில் அவர் மீண்டும் கட்சியில் இணைந்தார். […]

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) நாளுக்கு நாள் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அதன் வேகத்தை பார்த்தால், அதை உருவாக்கிய விஞ்ஞானிகளுக்கே பயம் உண்டாகிறது. இந்நிலையில், உலகின் முன்னணி AI நிபுணர்களில் ஒருவரான ஸ்டூவர்ட் ரஸ்ஸல், ஒரு பெரிய எச்சரிக்கையை விடுத்துள்ளார். அவரது கணிப்புப்படி, இனி வரும் காலங்களில் உலகெங்கிலும் சுமார் 80% வேலைவாய்ப்புகள் AI காரணமாக இல்லாமல் போகும் அபாயம் உள்ளதாகவும், அதிக சம்பளம் பெறும், […]

தென்காசியை சேர்ந்த கண்ணன் (25) என்பவரும், கேரள மாநிலம் புனலூரைச் சேர்ந்த கலாசூர்யா (25) என்பவரும் சொரிக்காம்பட்டி கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்துள்ளனர். கலாசூர்யாவுக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் முடிந்து விவாகரத்தான நிலையில், இரண்டாவது கணவர் மூலம் அவருக்கு சிவானி (2 வயது) என்ற பெண் குழந்தை இருந்தது. இதற்கிடையே, கண்ணனுக்கும் கலாசூர்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால், கலாசூர்யாவின் குழந்தை சிவானி தனக்குத் […]

சமூக ஊடகங்களிலும், வாட்ஸ்அப் குழுக்களிலும் கடந்த சில நாட்களாக ஒரு தகவல் வேகமாகப் பரவி வருகிறது. அதாவது, பிறப்பு பதிவு செய்யாதவர்கள், பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 27, 2026-ஆம் தேதியே கடைசி நாள் என்று மத்திய அரசு அறிவித்திருப்பதாக அந்த தகவல் பரவி வருகிறது. ஆனால், மத்திய அரசின் உண்மைச் சரிபார்ப்பு அமைப்பான பிஐபி உண்மை சரிபார்ப்புப் பிரிவு (PIB Fact Check) இந்தத் தகவல் குறித்துப் பொதுமக்களுக்கு […]