மனைவியின் சட்ட விரோத கட்டுப்பாட்டில் உள்ள இரட்டை குழந்தைகளை மீட்டு தரக்கோரி அமெரிக்கா வாழ் இந்தியரான கிரண் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தானும், தன் மனைவியும் இந்தியாவில் பிறந்திருந்தாலும் தற்போது அமெரிக்க குடிமக்களாக உள்ளதாகவும், பிறப்பால் தமது இரு குழந்தைகளும் அமெரிக்க குடிமக்கள் என தெரிவித்துள்ளார். கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் குழந்தைகளை இந்தியாவிற்கு அழைத்து வந்த மனைவி, அவர்களை […]
டெல்லியின் கஞ்சவாலா பகுதியில் அஞ்சலி(20) என்ற இளம்பெண் விபத்தில் சிக்கி 13 கிலோமீட்டர் தூரம் இழுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரில் இருந்த 5 போரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த அஞ்சலி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என்று குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பிய நிலையில், இன்று வெளியான பிரேதபரிசோதனை அறிக்கையில் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை, பல கிலோமீட்டர் இழுத்து செல்லப்பட்டதாலேயே இளம்பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுளது. […]
கரூர் மாவட்ட அதிமுக அவை தலைவர் திரு.வி.க கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அடுத்த நாளில் அதிமுக மாவட்ட ஐடி விங் இணைச் செயலாளர் சிவராஜ் திமுக பிரமுகர் ஒருவரால் கடத்தப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டு மீட்கப்பட்டார். இந்த நிலையில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாகவும், திமுக அரசை கண்டித்து கரூரில் முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்று […]
வருடந்தோறும் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) மூலமாக இந்த GATE (Graduate Aptitude Test in Engineering) தேர்வானது நடத்தப்படுகிறது. ஐ.ஐ.டி. மற்றும் ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை படிப்புகளில் சேர, இந்த GATE தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வின் தேர்ச்சியின் அடிப்படையிலேயே பல்வேறு நிறுவனங்களில் பணிவாய்ப்பும் வழங்கப்படுகிறது. தற்போது 2023ம் ஆண்டிற்கான GATE தேர்வு பிப்ரவரி 4 முதல் 12ம் தேதி வரை பாடப்பிரிவு வாரியாக நடைபெறவுள்ளது. […]
பிரபல செய்தி தொலைக்காட்சியில் விவாதங்கள் மூலம் பிரபலமடைந்தவர் மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே. இவர் பத்திரிகையாளர் மட்டுமன்றி ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் ரங்கராஜ் பாண்டேவின் நடிப்பு கவனம் பெற்றது. தற்போது யு-டியூப் சேனலை நடத்தி வருகிறார். ரங்கராஜ் பாண்டேவின் தந்தையார் நேற்றைய தினம் மரணமடைந்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார், அந்த பதிவில் “என் திருத்தகப்பனார் ஶ்ரீ […]
புதிய உருமாறிய கொரோனாவின் தாக்கம் சீனாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. சீனா மட்டும் இல்லாமல் பல நாடுகளிலும் தோற்று பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் இந்த உருமாறிய கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இதனை தொடர்ந்து முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக வெளிநாடுகுகளில் இருந்து வருவோருக்கு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. அதன்படி சீனா, சிங்கப்பூர், ஜப்பான், ஹாங்கங் கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு 100% கொரோனா பரிசோதனை சான்றிதழ் […]
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள விளாம்பட்டியை சேர்ந்தவர் அஜித் குமார் வயது 28, இவர் நேற்று இரவு மதுபோதையில் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆரோக்கிய மாதா தெருவில் வந்து கொண்டிருந்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அஜித் குமாரை கத்தியால் கழுத்தில் குத்தியுள்ளனர். ரத்த வெள்ளத்துடன் உயிருக்கு பயந்து அங்கிருந்து ஓடி வந்த அஜித் குமார் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் உள்ள நத்தம் […]
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அடுத்த வி.சி.மோட்டூர் பகுதியை சேர்ந்தவர்கள் குழந்தைவேலு (35) மற்றும் அவரது நண்பர் சரவணன் (35) இருவரும் புத்தாண்டை முன்னிட்டு, வாலாஜாபேட்டை அடுத்த வி.சி.மோட்டூர் வேலூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அருகே இருக்கும் லாரி எடை மேடை நிலையத்திற்கு அருகில் மது குடித்துவிட்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த லாரியில் இருந்த ஓட்டுநரிடம் மது போதையில் இருந்த குழந்தைவேலு மற்றும் சரவணன் இருவரும், தகாத […]
நாகப்பட்டினம் மாவட்டம் காடம்பாடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலமுருகனின் மனைவி பவித்ரா வயது 26. கர்ப்பிணியான இவர், பிரசவ வலி காரணமாக கடந்த 29ஆம் தேதி நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைத்துள்ளனர். அதன்படி 29 ஆம் தேதி இரவு 8 மணிக்கு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கர்ப்பிணி பவித்ரா அனுமதிக்கப்பட்டார். திருவாரூர் அரசு […]
ஆஸ்திரேலியாவில் நடுவானில் இரண்டு ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள தங்க கடற்கரை அருகே சீ வேல்டு தீம் பார்க் என்ற கேளிக்கை பூங்கா உள்ளது. கடற்கரை, கேளிக்கை பூங்கா உள்ளதால் இந்த இடம் சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்து வருவார்கள். மேலும் இங்கு சுற்றலா பயணிகளின் வசதிக்கு ஏற்ப ஹெலிகாப்டர்களும் இயக்கப்படுகின்றன. அதேபோல் […]