சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஆங்கில புத்தாண்டு விடுமுறை என்பதால் ஏராளமான பார்வையாளர்கள் நேற்றைய தினம் குவிந்தனர். அதேபோல புத்தாண்டை கொண்டாடுவதற்காக படப்பையை சேர்ந்த செம்பருத்தி (20) என்பவர் தனது தோழியுடன் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு சுற்றி பார்பதற்க்கு வந்தார். அவர் நுழைவு கட்டணத்தை எடுத்த சிறிது நேரத்தில் கூட்ட நெரிசல் காரணமாக திடிரென மயங்கி கீழே விழுந்தார். பேச்சு மூச்சின்றி ஆபத்தான நிலையில் […]
நாமக்கல்லில் இருந்து தான் முட்டை, தமிழகம் முழுவதும் மட்டும் அல்லாமல் வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் கூட ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த முட்டையின் கொள்முதல் விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்பிக்குழு நிர்ணயம் செய்து வருகிறது. கடந்த மாதம் டிசம்பர்23-31 வரை முட்டையின் கொள்முதல் விலை 5.50காசுகள் இருந்த நிலையில், நேற்றைய தினம் கொள்முதல் விலையில் 5 காசுகள் உயர்த்தி 5.55க்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கொள்முதல் விலை இன்று முதல் அமலுக்கு […]
செங்கல்பட்டு மாவட்டம், புலிப்பாக்கம், மேட்டு தெரு பகுதியை சேர்ந்தவர் அருண் (35) கூலி தொழிலாளி. அருணும் அவரது மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். குடிப்பழக்கத்திலிருந்து மீள்வதற்கு மறுவாழ்வு மையத்திற்கு, அருண் சென்று வந்த பிறகும் தொடர்ந்து மதுவுக்கு அடிமையாகவே இருந்து வந்துள்ளார். மனைவி பிரிந்து சென்றதிலிருந்து அடிக்கடி ஊரில் இருக்கும் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுடன் சென்று நள்ளிரவு வரை குடித்துவிட்டு போதையில் இருப்பதே வழக்கமாக கொண்டு […]
மின் இணைப்போடு ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றோடு முடிவடைய உள்ள நிலையில் ஜனவரி 31வரை நீட்டிக்கப்பட உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். நுகர்வோர் தங்கள் மின் மானியத்தைப் பெற விரும்பினால், மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டு, கடந்த மாதம் முதல் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த சிறப்பு முகாம்கள் டிசம்பர் 31 […]
புதுச்சேரி ஒதியம் பட்டு அடுத்த நரிக்குறவர் காலணியில் இன்று அதிகாலையில் வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் புத்தாண்டு விருந்துக்காக தயார் செய்து வைக்கப்பட்டிருந்த பருந்து, கிளி, பால் ஆமை, கொக்கு, ஆள்காட்டி குருவி, நாரை உள்ளிட்ட 63 வகையான பறவைகள் மற்றும் முயல் கறி, உடும்பு கறி, மான் கறி, ஆகியவைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பறவைகள் வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள், வெடி […]
முன்னாள் WWE மற்றும் AEW மல்யுத்த வீரர் ஜெய்சின் ஸ்டிரைஃப் நீண்ட உடல்நலப் போருக்குப் பிறகு 37 வயதில் காலமானார். நேதன் பிளாட்ஜெட் என்ற இயற்பெயரை மாற்றி ஜெய்சின் ஸ்டிரைஃப் என்று மல்யுத்த களத்தில் பங்குபெற்றார்.WWE மற்றும் ஆல் எலைட் மல்யுத்தம் போன்ற பல மல்யுத்த நிறுவனங்களுக்காக ஸ்டிரைஃப் விளையாடினார். ஜெய்சின் ஸ்டிரைஃப் 2004 இல் அறிமுகமானார் மற்றும் மேக்னம் ப்ரோ மல்யுத்தத்தை 2010 இல் தொடங்கினார், அங்கு அவர் […]
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சீராப்பள்ளி மூப்பனார் கோவில் தெருவை சேர்ந்தவர் கபில்வாசன்(32) இவரது மனைவி ராஜாமணி (24) இந்த தம்பதியினருக்கு நவியா ஸ்ரீ (5)என்ற பெண் குழந்தையும், தருண்(3) என்ற ஆண் குழந்தையும் உள்ளது. கபில்வாசன் அதே பகுதியில் உள்ள சேகோ ஆலையில் கூலி வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த உறவினர் பாலமுருகன் என்பவரது மகன் ராகுல்(23). நேற்றைய தினம் ராகுல், கபில் வாசன் வீட்டிற்கு […]
புத்தாண்டை முன்னிட்டு இன்று இரவு பொது இடங்களிலும் கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டுமென காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இன்று நள்ளிரவு பொதுமக்கள் மோட்டார் வாகனங்களில் தேவையின்றி சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும். இதேபோல் நாளை இரவும், புத்தாண்டின் போதும் பொதுமக்கள் கடல் நீரில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது. புத்தாண்டு கொண்டாட்டத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் கைது செய்யப்படுவதுடன் அவர்களின் வாகனமும் பறிமுதல் […]
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பகுதியில் நேற்றிரவு வானில் பறக்கும் ரயில் போவது போன்ற தெரிந்த ஒளியை இளைஞர்கள் வீடியோ எடுத்தனர். சிலர் இதனை வானில் தோன்றும் ஒரு அறிய நிகழ்வு என்று கூறினர். மற்றவர்கள் இது யுஎஃப்ஒ என்று ஆச்சரியப்பட்டனர். சிலர் இதனை ஆத்மாக்களின் அணி வகுப்பு என்றும், இது வேற்று கிரக வாசிகளின் வாகனம் என்றும் தங்களின் கருத்துகளை கூறி வருகின்றனர். ஆனால் வானில் தோன்றிய இந்த மர்ம […]
சென்னை சாலிகிராமம் பகுதியை சேர்ந்த 48வயது பெண் ஒருவர் வயதான முதியவரை பராமரிக்கும் வேலை பார்த்து வருகிறார். இவரது செல்போன் “வாட்ஸ் ஆப்” எண்ணிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு “ஆபாசமாக படங்களை போட்டு அதில் செல்போன் எண்ணையும் பதிவிட்டு உன்னை அசிங்கப்படுத்தி விடுவேன்” என்று கூறி மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்து குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார். அதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண், குறுஞ்செய்தி வந்த […]