பைக் மற்றும் கார் ரேஸ் மீது அதிகம் ஆர்வம் கொண்ட நடிகர் அஜித் , அவ்வப்போது மோட்டார் சைக்கிள் பயணம் செல்வது வழக்கம். அஜித்தும் அவரின் பைக் பயணமும் பிரிக்கமுடியாத ஒன்று. எப்போதெல்லாம் சூட்டிங் இல்லாமல் ஓய்வில் இருக்கிறாரோ அப்போதெல்லாம் பைக்கில் கிளம்பிவிடுவார். கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் அவ்வப்போது மோட்டார் சைக்கிளில் இந்தியா முழுவதும் நடிகர் அஜித் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதுவரை அவர் சென்று வந்த […]

பெங்களூரில் இருந்து புறப்பட்டு அசாம் மாநிலத்திற்கு செல்லக்கூடிய அதிவிரைவு ரயில் வண்டியான கவுகாத்தி விரைவு வண்டி பெரம்பூர் வந்த போது பள்ளி மாணவர்களும் கல்லூரி மாணவர்களும் வட மாநிலத்திற்கு செல்வதற்காக முன்பதிவு செய்யப்பட்டிருந்த பெட்டியில் வட மாநிலத்தவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஏறி ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இது குறித்து பெற்றோர்களிடம் மாணவர்கள் செல்போனில் தகவல் தெரிவித்துள்ளனர், உடனடியாக ரயில்வே கட்டுப்பாட்டு மையத்துக்கு புகார் வந்துள்ளது,அந்த புகாரின் அடிப்படையில் ரயில்வே போலீசார்ர் திருவெற்றியூர் […]

அரியவகை மூலிகையாக கருதப்படும் கீடா ஜாடி-யை தேடித்தான் சீன வீரர்கள் சட்ட விரோதமாக இந்தியாவினுள் நுழைந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஹிமாலயன் தங்கம் என்று அழைக்கப்படும் இந்த மூலிகைக்கு பல பெயர்கள் உள்ளன, இந்தியாவில் இதை கீடா ஜாடி எனவும், சீனா மற்றும் நேபாளத்தில் யார்சா கும்பா, திபெத்தில் யார்சா கும்பு என்றும் அழைக்கப்படுகிறது. இந்தோ-பசிபிக் சென்டர் ஃபார் ஸ்ட்ராடஜிக் கம்யூனிகேஷன்ஸ் (ஐபிசிஎஸ்சி) இன் புதிய அறிக்கையின்படி, அருணாச்சல பிரதேசத்தில் […]

கரூர் அடுத்த வாங்கப்பாளையம் தீரன் நகரில் 5 அடி நீளம் கொண்ட சாரை பாம்பு ஒன்று மரத்தின் மீது ஊர்ந்து கொண்டிருந்தது. அப்பகுதி வழியாக சென்றவர்கள் மரத்திலிருந்து ஒருவித சத்தம் வருவதை உணர்ந்து கவனித்துள்ளனர். அதில் பாம்பு ஒன்று அசைந்து கொண்டிருப்பது கண்டு அச்சம் அடைந்து கரூர் தீயணைப்பு நிலையத்துக்கு அப்பகுதியினர் தகவல் அளித்தனர். கரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையில் தீயணைப்பு படையினர் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்தனர். […]

ஆவடி மாநகர காவல் ஆணையரகம் திருமுல்லைவாயல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூர்த்தி நகர், நாகாத்தம்மன் கோவில் தெரு, வசிப்பவர் ஹரிஷ் சங்கர்(25). இவர் நேற்றைய தினம் தனது தாயாருடன், 40 சவரன் நகை கொடுக்க அக்காவீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார. அப்போது வளைவில் முன்னே சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றபோது எதிரில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பைக் மீது உரசியபோது, மாட்டி வைத்திருந்த பை அந்த இடத்திலேயே விழுந்தது. இதை […]

செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகே சாலை ஓரத்தில் 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் சிறு பொருட்களை வியாபாரம் செய்து வருகின்றனர் மேலும் வேன் ஸ்டாண்ட் உள்ளிட்டவையும் இங்கு வைத்துள்ளனர் தற்போது நகராட்சி அதிகாரிகளும் ஊழியர்களும் நூற்றுக்கு மேற்பட்ட போலீசாரின் பாதுகாப்புடன் திடீரென அங்குள்ள கடைகளையும் வாகனங்களையும் அகற்றினர். அப்போது அங்கு கடை வைத்திருப்பவர்களும் நரிக்குறவர் இன மக்களும் நகராட்சி அதிகாரிகளுடன் முன்னறிவிப்பின்றி அகற்றுவதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். […]

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில், பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ளது “வாரிசு” படம். 2023 ஆம் ஆண்டு பொங்கலன்று திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு தமன் […]

தென்அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் பீலே (வயது 82). இவருக்கு புற்றுநோய் கட்டி இருந்ததால் கடந்த ஆண்டு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அந்த புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. இருப்பினும், அவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவே பீலே உடல்நலம் பலவீனமடைந்து இருந்தது. இதனையடுத்து, பிரேசிலின் சாவ் பொல்ஹொ பகுதியில் உள்ள மருத்துவமனையில் கடந்த […]

2023 ஆம் ஆண்டு முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் வருகின்ற 9ம் தேதி காலை 10 மணிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் துவங்குகிவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். சமீபத்தில் தமிழக அமைச்சரவையில் முக்கிய அமைச்சர்களின் இலாகாக்கள் மற்றம் செய்யப்பட்டது, மேலும் உதயநிதி ஸ்டாலின் புதிய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 2023 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 9ஆம் தேதி தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]

சீனாவில் தற்போது BF.7 வகை கொரோனா வைரஸ்-ன் தாக்கம் வேகம் எடுத்துள்ளது. சீன மட்டும் இல்லாமல் தென்கொரிய ஜப்பான் போன்ற பல நாடுகளில் இந்த BF.7 வகை கொரோனா அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் அதனுடைய பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டாலும் அதிக இழப்பு இல்லை. இந்த புதிய வகை கொரோனா பரவலை தடுக்க விமனநிலையத்தில் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது, வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் விமான நிலையத்தில் பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப் படுகின்றனர். தமிழக […]