தளபதி விஜய் நடிப்பில், பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ளது “வாரிசு” படம். முதலில் இந்த படத்திற்கு ஆந்திராவில் திரையங்குகள் கிடைப்பதில்லை என்ற சிக்கல் தோன்றி மறைந்தது, பிறகு தமிழகத்தில் அதே பிரச்சனை பூதாகரமாக வெடித்து தற்போது அதுவும் சரியாகி, 2023 ஆம் ஆண்டு பொங்கலன்று திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, […]

மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தை வருகிற 21-ந்தேதி நடத்த முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முடிவு செய்துள்ளார். இதற்கான அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். இந்நிலையில் டிசம்பர் 27ஆம் தேதி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சார்பில் ஆலோசானை கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிமுக தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைத்து நிர்வாகிகளும், டிசம்பர்-27ஆம் தேதி எம்ஜிஆர் […]

22-வது உலகக்கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த ஒரு மாத காலமாக நடந்து வந்தது. 32 நாடுகள் கலந்து கொண்ட இந்த கால்பந்து திருவிழாவின் இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினாவும் நடப்பு சாம்பியன் பிரான்சும் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி பெனால்டி ஷூட்-அவுட் மூலம் 4-2 என்ற கணக்கில் கோப்பையை தட்டி சென்றது. அர்ஜென்டினா அணி உலககோப்பையை வெல்வது இது 3-வது […]

சென்னை தாம்பரம் அருகே உள்ள சித்தாலப்பாக்கம் அசினாபுரத்தை சேர்ந்தவர் செந்தில் இவரது மகன் சதீஷ் இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ வரலாறு இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி அருகில் உள்ள அரசினர் விக்டோரியா மாணவர் தங்கும் விடுதியில் அறை எண் 104-ல் தங்கி படித்து வருகிறார். மேலும் விடுதி அருகே உள்ள பிட்சா கடையில் பகுதி நேரமாக டெலிவரி பாய் வேலையும் செய்துகொண்டே படிப்பையும் தொடர்ந்துள்ளார். இந்நிலையில் […]

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாக இருப்பதாக ஆங்காங்கே புகார்கள் வந்த நிலையில், பொது விநியோகத் திட்டத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் சக்கரபாணி ஏப்ரல் 1 முதல் ரேஷன் கடைகலீல் செறிவூட்டப்பட்ட அரிசி கிடைக்கும் என கூறினார். மேலும் பேசிய அவர், […]

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள கொத்தங்குடி பகுதியை சேர்ந்த தனபால் காவல்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர், இவரது வீடு மற்றும் தோட்டத்தை சுற்றி பாதுகாப்புக்காக வலையுடன் கூடிய மூங்கில் வேலி அமைத்துள்ளார்‌. இந்நிலையில் அவரது தோட்டத்தை பணியாளர்கள் சுத்தம் செய்த போது கொடிய விஷம் கொண்ட 4 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு தப்பி செல்ல முயன்ற போது, அங்குள்ள வேலியில் சிக்கிக்கொண்டது. அதனை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் […]

திருப்பூர் மாவட்டம், அலகுமலை கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கூடாது எனக் கோரி அளித்த விண்ணப்பத்தை ஆறு வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், அலகுமலை கிராம பஞ்சாயத்து தலைவர் தூயமணி தாக்கல் செய்த மனுவில், அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கம் சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவதாகவும், தங்கள் கிராமத்தில் […]

நடிகர் அஜித்குமார், கஷ்டப்படும் ரசிகருக்கு 15 லட்சம் செலவில் வீடு கட்டி தருகிறார், ஆனால் பத்திரபதிவுக்கு 1 லட்சம் செலுத்தவேண்டும் என்று கூறி மோசடி செய்துள்ளனர் என பாதிக்கப்பட்டவரின் மனைவி திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு அளித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் கட்டப்புளி பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் ராஜேஸ்வரி தம்பதியினர். ஐயப்பன் தீவிரமான அஜித் ரசிகர் என்று கூறப்படுகிறது இதனை பயன்படுத்திக் கொண்டு திருநெல்வேலி […]

உப்பெனா என்ற தெலுங்கு படத்தை தமிழில் ரீமேக் உரிமையை தான் வாங்கவில்லை என நடிகர் விஜய்சேதுபதி தரப்பு விளக்கத்தை ஏற்று, அவருக்கு எதிரான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தெலுங்கு நடிகர் வைஷ்ணவ் தேஜ், கீர்த்தி ஷெட்டி நடிப்பில் தெலுங்கில் உருவான ‘உப்பெனா’ படத்தை, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க, புஜ்ஜி பாபு சனா படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தை தமிழில் மறு உருவாக்கம் […]