சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ள எஸ்.எம்.சுப்ரமணியம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தில், நேற்று தனது குடும்பத்தினருடன் வடபழனி முருகன் கோயிலுக்கு சென்றதாகவும், நீதிபதி என்ற அடையாளத்தை வெளிப்படுத்தாமல் சிறப்பு தரிசனத்திற்காக நூற்றைம்பது ரூபாய் கொடுத்து மூன்று டிக்கெட்கள் வாங்கியதாக கூறியுள்ளார். அப்போது, கவுண்டரில் இருந்த பெண் ஊழியர் ஐம்பது ரூபாய்க்கான இரண்டு டிக்கெட்களையும், ஐந்து ரூபாய்க்கான ஒரு டிக்கெட்டையும் வழங்கியதாகவும், இதுகுறித்து கேள்வி எழுப்பிய பின் […]

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணனை கைது செய்து ஆஜர்படுத்தும்படி, தமிழ்நாடு மாநில ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், சிவந்திப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பரமானந்தம் என்ற பட்டியல் இனத்தை சேர்ந்தவரின் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு, வழி மறிக்கப்பட்டு, வேலியிடப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் அறிக்கை தாக்கல் செய்ய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு, […]

சபரிமலையில் மண்டல பூஜைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் நாளுக்குநாள் பக்தர்கள் கூட்டம் அதிகமாகி வருகிறது. சில நாட்களுக்கு முன் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். இந்த வரலாறு காணாத கூட்டத்தால் நெரிசலில் சிக்கி பக்தர்கள் அவதிக்குள்ளானார்கள். இதனைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யவும், ஒரு நாளில் 90 ஆயிரம் பேர் மட்டுமே முன்பதிவு செய்யலாம் என்ற கட்டுப்பாடு […]

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு பரிசாக ரூ.1,000 வழங்குவதற்கான திட்டத்தை தமிழக அரசு வகுத்துள்ளது. பொங்கல் பரிசு தொகையை நேரடியாக வழங்குவதா அல்லது வங்கியில் போடுவதா உள்ளிட்ட நடைமுறை குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக இன்று தலைமைச் செயலகத்தில் அனைத்து அமைச்சர்களையும் அழைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சராக இடம் பெற்றுள்ள உதயநிதி ஸ்டாலினும் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார். தமிழக […]

22-வது உலகக்கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த ஒரு மாத காலமாக நடந்து வந்தது. 32 நாடுகள் கலந்து கொண்ட இந்த கால்பந்து திருவிழாவில் நேற்றிரவு அர்ஜென்டினாவும் நடப்பு சாம்பியன் பிரான்சும் இறுதி ஆட்டத்தில் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினாவின் ஆதிக்கமே இருந்தது. 23வது நிமிடத்தில் முதல் கோல், 36வது நிமிடத்தில் 2வது கோல் என 2-0 என்று ஆதிக்கம் செலுத்தியது அர்ஜென்டினா. உலக […]

22-வது உலகக்கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த ஒரு மாத காலமாக நடந்து வந்தது. 32 நாடுகள் கலந்து கொண்ட இந்த கால்பந்து திருவிழாவில் நேற்றிரவு அர்ஜென்டினாவும் நடப்பு சாம்பியன் பிரான்சும் இறுதி ஆட்டத்தில் மோதின. விறு விறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினாவின் ஆதிக்கமே இருந்தது. 23வது நிமிடத்தில் முதல் கோல், 36வது நிமிடத்தில் 2வது கோல் என 2-0 என்று ஆதிக்கம் செலுத்தியது அர்ஜென்டினா. […]

கார் போன்ற வாகனங்கள் வெயில் காலங்களில் ஓடி கொண்டிருக்கும் போது தீ பிடித்து பற்றி எறிவது போன்ற நிகழ்வுகளை நாம் கேட்டிருப்போம், அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது சென்னையில் நடந்துள்ளது. சென்னை, கிண்டியில் உள்ள கத்திப்பாரா மேம்பாலம் எப்போதும் பிஸியாகி இயங்கும் ஒரு சாலை, அதில் தான் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. இன்று மாலை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் […]

ஆந்திரா மாநிலம் விஜயவாடா மாவட்டத்தில் உள்ள தாடேபள்ளி என்ற பகுதியைச் சேர்ந்தவர் சரண் (40). இவர் மீது அவரின் மனைவி நேற்று முன்தினம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். தான் ஹெச்ஐவி வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது, மருத்துவப் பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது, ஒருமுறை உடல்நிலையை சரியாக வைத்துக்கொள்ள வேண்டும் எனக்கூறி, ஊசி ஒன்றை கணவர் தனக்கு செலுத்தியத்தில் இருந்துதான் தனக்கு ஹெச்ஐவி நோய் தொற்று ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். […]

டெல்லி ஷ்ரத்தா வாக்கர் கொடூர படுகொலைக்கு பின்னர், அவரது உடல் 35 துண்டுகளாக வெட்டப்பட்ட சம்பவம் போன்ற சம்பவங்கள் நாட்டின் பல பகுதிகளில் அதிகரித்து காணப்படுகின்றன. அதே போல் ஒரு சம்பவம் தற்போது ஜார்கண்டில் நடந்துள்ளது. ஜார்க்கண்டின் சாகேப்கஞ்ச் நகரில் நாய்கள் மனித இறைச்சியை உண்பதை பார்த்த மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் 12 துண்டுகளை கண்டுபிடித்துள்ளனர். அந்த உடலின் தலை பாகங்கள் கிடைக்கவில்லை என்றும், […]

பீகார், பெகுசாய் பகுதியில் உள்ள கந்தக் நதியின் மீது பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. இது தொடர்பாக, சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள், சாலை போராட்டங்கள் முதல் சட்டசபை வரை தங்கள் கோரிக்கையை வலுவாக எழுப்பினர். 2012-13ம் ஆண்டு, பாலம் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டது. 14 கோடி செலவில் 206 மீட்டர் நீளமுள்ள இந்தப் பாலம் முதலமைச்சர் நபார்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது. […]