தமிழக பாஜக தலைவரின் கைக்கடிகாரம் தான் தற்போது பேசு பொருளாகியுள்ளது, சுமார் 3 லட்சம் மதிப்புள்ள அந்த கடிகாரம் ரபேல் விமான பாகங்களில் இருந்து செய்யப்பட்டுள்ளது, எளிமை இன்றி தன்னை காட்டிக்கொள்ளும் அண்ணாமலை அவர்கள் எப்படி 3 லட்சம் மதிப்புள்ளா கடிகாரத்தை வாங்கினார் போன்ற கடுமையான விமர்சனங்களை திமுக உள்ளிட்ட பல தரப்பினர் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்நிலையில் தமிழா பாஜக தலைவர் அண்ணாமலை தனது டீவீட்டில் திமுகவினரை சீண்டியுள்ளார். […]

மின் இணைப்புடன் ஆதார் இணைக்க சிறப்பு முகாம், மற்றும் சிறப்பு இணையதளம் மூலமாக நடைபெற்று வருகிறது. இதற்கு வரும் 31ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாக மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளிநாட்டில் வசிப்பவர்களின், தமிழகத்தில் உள்ள அவர்களுது வீட்டின் மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் எவ்வாறு இணைப்பது என்ற சந்தேகம் எழுந்தது. இதற்கு தீர்வு காணும் வகையில், ஆதார் எண்ணை இணைக்கும் இணையதள பக்கத்தில் 4வது ஆப்ஷனாக என்.ஆர்.ஐ. […]

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு பரிசாக ரூ.1,000 வழங்குவதற்கான திட்டத்தை தமிழக அரசு வகுத்துள்ளது. இதை வழங்குவதற்கான நடைமுறை குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக நாளை தலைமைச் செயலகத்தில் அனைத்து அமைச்சர்களையும் அழைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சராக இடம் பெற்றுள்ள உதயநிதி ஸ்டாலினும் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார். தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்று முடிந்தது. […]

சி.பி.எஸ்.இ கல்வி வாரியத்தின் பெயரில் போலி இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டு நிதி முறைகேடுகளில் ஈடுபடுவதாக அந்த அமைப்பு மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சி.பி.எஸ்.இ செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி ‘சி.பி.எஸ்.இ. அதிகாரபூர்வ இணையதளமான www.cbse.gov.in-ஐ போல, போலி இணையதளம் ஒன்றை “cbsegovt.com” என்ற பெயரில் சில சமூக விரோதிகள் உருவாக்கி உள்ளனர். 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்குவதற்கு பணம் டெபாசிட் […]

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நாளான சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுவதை முன்னிட்டு திருச்சி மாவட்டத்துக்கு ஜனவரி-2 ஆம் தேதி (திங்கட்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறையானது திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கும் பொருந்தும். இந்த ஜனவரி-2 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளில் தேர்வு நடைபெறுவதாக இருந்தால் இந்த விடுமுறை […]

நேற்று சென்னை சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர்,“நான் படித்த பள்ளிக்கு போகப்போகிறேன் என்று நேற்றிரவு முதலே மகிழ்ச்சியில் இருந்தேன் தூக்கம் வரவில்லை, வழக்கமாக 2-3 மணிக்குதான் தூங்குவேன், அந்த தூக்கமும் நேற்று வரவில்லை. மாணவப் பருவம் என்பது திரும்ப கிடைக்காத காலம். இங்க இருக்கும் சில முகங்களை பார்க்கும்போது குறிப்பாக என்னுடைய தமிழ் […]

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கோவை கிணத்துக்கடவு பகுதிகளில் கனிமவள கொள்ளை அதிகரித்துள்ளது.. இந்த விவகாரத்தில் பாஜக தொடர் போராட்டங்களைக் கையில் எடுக்கும். அமுல் நிறுவனத்தில் வரும் லாபத்தில் 82 சதவிகிதம் விவசாயிகளுக்குச் செல்கிறது. ஆவின் நிறுவனம் அப்படி நடந்துகொள்ளவில்லை, ஆவின் நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தில் சென்று கொண்டிருக்கிறது. திமுக அமைச்சர் ஒருவருக்குச் சாதமாக இருக்கவே இப்படிச் செய்கிறார்கள். கோவை […]

நெய்வேலி என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி அதிமுக சார்பில் நெய்வேலி சுரங்கம் முன்பு என்எல்சி நிறுவனத்தை கண்டித்தும், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் தமிழக அரசுசைகண்டித்தும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம், “மத்திய பாஜக அரசு சொல்லும் பணிகளை வாயை மூடி தன் தலையில் தூக்கிவைத்து திமுக ஸ்டாலின் அரசு செய்து வருகிறது. குறிப்பாக என்எல்சி விவகாரத்தில் ஆண்டுக்கு 2 […]

80ஸ், 90ஸ்-க்களில் கொடிகட்டி பிறந்தவர் குஷ்பூ, அந்த காலகட்டத்தில் ஒரு நடிகைக்கு கோவில் கட்டப்பட்டது என்றால் அது இவருக்கு தான், அந்த அளவுக்கு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். பிறகு இவர் இயக்குனர் சுந்தர் சி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்களும் உள்ளனர். தற்போது திரைப்படத்தில் அதிகம் கவனம் செலுத்தவில்லை என்றாலும் சீரியல், அரசியல் என பிஸியாகவே இருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன் நடிகை குஷ்பூ […]

கடந்த வியாழனன்று, 12232 என்று ரயிலில் சண்டிகரில் இருந்து ஷாஜஹான்பூருக்குப் சிவம் பட் என்பவர் பயணித்தார் அப்போது ரயிலை ஒருவர் ஏறி 15 ரூபாய் மதிப்புள்ள தண்ணீர் பாட்டிலை 20 ரூபாய்க்கு தினேஷ் என்ற நபர் விற்று இருக்கிறார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் “ரயில் 12232 இல் ஒரு பேண்ட்ரி கார் அல்லது மேலாளர் இல்லை என்று விற்பனையாளர் தொடர்ந்து கூறினார். எனவே, யார் வேண்டுமானாலும் ரயிலில் […]