சென்னை ஆவடி காமராஜர் நகரைச் சேர்ந்தவர், பிரபல தொழில் அதிபரான மணி. இவருக்கு 47 வயது இருக்கும். இவர் கடந்த மாதம் 27ஆம் தேதி கோடம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலின் மதுபானக்கூடத்தில் மது அருந்தியுள்ளார். அப்போது அங்கு தீபிகா என்ற தீபலக்ஷ்மியும் மது அருந்த வந்துள்ளார். இவர் மணிக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான தோழி ஆவார். பின்னர் இருவரும் ஒன்றாக மது அருந்திவிட்டு அந்த ஓட்டலிலேயே அறையெடுத்து தங்கி இரவு […]

கேரளாவில் அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட்ட 51 அரசு மருத்துவர்கள் பணிக்கு ஒழுங்காக வராத காரணத்தினால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் அறிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் வீனா ஜார்ஜ் புதன் கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநில அரசின் மருத்துவ கல்வித்துறையின் கீழ் ஏராளமான மருத்துவர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில் பல மருத்துவர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என கண்டறியப்பட்டது. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், 51 […]

அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் சோதனை நடத்தினர். பல முக்கிய ஆவணங்களை நடந்த சோதனையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது. அப்போது, ஆவணங்கள், லேப்டாப்புகள் போன்ற பல முக்கிய பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் விக்ரம் ரவீந்திரனின் அலுவலகங்கள் மற்றும் […]

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல காமெடி நடிகர் மதன் பாப் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாலுமகேந்திரா இயக்கிய நீங்கள் கேட்டவை திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார் நடிகர் மதன் பாப். குணச்சித்திரம், காமெடி என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் திறமையாக நடிக்கக்கூடியவர். அவரது தனித்துவமான சிரிப்பு மக்களிடம் கொண்டாடப்பட்டது. தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் சன் டிவியில் […]

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள், “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி இன்று தஞ்சாவூரின் பல பகுதிகளில் பயணம் மேற்கொண்டார். பட்டுக்கோட்டையில் சுற்றுப் பயணத்தின் பொது உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, “அதிமுக உங்கள் […]

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். இவரை கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீசார் அழைத்துச் சென்றனர். போலீசார் கடுமையாக தாக்கியதில் ஜூன் 28-ம் தேதி அஜித்குமார் உயிரிழந்தார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இதனையடுத்து, குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டதாக […]

மோட்டார் வாகனத் துறையின் எம்-பரிவஹான் (mParivahan app) செயலியின் பெயரில் சைபர் மோசடியால் பலரும் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த சைபர் மோசடிமூலம் பலர் பணத்தை இழந்துள்ளனர். சைபர் மோசடி குறித்து காவல்துறை மோட்டார் வாகனத் துறை மற்றும் சைபர் பிரிவு, பொதுமக்களை விழிப்புடன் இருக்குமாறு தெரிவித்துள்ளன. இந்த மோசடியில் பணத்தை இழந்த பெரும்பாலானோர் கேரளாவின் எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த சைபர் மோசடியால் […]

சீமான் பனை ஏறி கள்ளு குடிக்க வலியுறுத்துவதும், மாடுகளை மேய்க்கச்சொல்லுவதும் சாதி வெறியின் எச்சம் என்று விசிகவின் வன்னி அரசு கடுமையாக விமர்சித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்றைய தினம் மதுரையில் ஆடு மாடுகளுக்கான மாநாட்டை நடத்தினார். அப்போது ஆடு மாடுகளை மேய்ப்பது அவமானம் அல்ல வெகுமானம் என்பதை உணராத வரை, நாட்டின் பொருளாதாரம் வளராது என்று ஆவசேமாக பேசினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை […]