ஆதார் அட்டை என்பது பல துறைகளிலும் நாம் பயன்படுத்தக் கூடிய, அவசியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. வங்கிக் கணக்கு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு எனப் பலவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள ஆதார் அடையாள அட்டையை தற்போது மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 100 யூனிட் இலவச மின்சார மானியம் பெறுவதற்கு மின் நுகர்வோர் அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று […]
சென்னையில் சர்வதேச புத்தகக் கண்காட்சி விரைவில் நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது சர்வதேச புத்தக கண்காட்சி எப்போது நடைபெறும் என அறிவித்துள்ளார். அதன் படி சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி ஜனவரி மாதம் 16, 17, 18 ஆகிய மூன்று நாட்களில் நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். மேலும் இந்த கண்காட்சியில் 40 […]
பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கி. அதன்படி வட்ட ஆலோசகர், கடன் ஆய்வாளர், மேலாளர் மற்றும் பிற துறைகளில் மொத்தம் 65 காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வருகின்ற டிசம்பர் 12ஆம் தேதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் தகவல்களை அறிய […]
182 இடங்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இன்று மற்றும் ஐந்தாம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற தொடங்கியுள்ளது. காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இதற்காக 89 தொகுதிகளிலும் 14 ஆயிரத்து 382 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன நகர்ப்புறங்களில் 3311 வாக்குச்சாவடிகளும் கிராமப்புறங்களில் 11 ஆயிரத்து 71 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 89 […]
சைபர் க்ரைம் மோசடியில், படித்தவர்கள் கூட கோடிக்கணக்கான பணத்தை இழந்துள்ளனர். இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அரங்கத்தில்சைபர் பாதுகாப்பு சிக்கல்கள் மற்றும் போக்குகள் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கூறியது, சைபர் க்ரைம் மோசடியில் ஒரு எல்லை கிடையாது. எந்த மூலையில் இருந்தும் பணத்தை எடுத்து மோசடி […]
எரிபொருள் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தை நிர்ணயிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆட்டோ கட்டணம் மாற்றியமைக்கப்பட்ட பிறகு, டீசல் மற்றும் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்ந்து வருவதாகவும், ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக கட்டணம் மறுநிர்ணயம் செய்யபடவில்லை என சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.வி. ராமமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் […]
தமிழகத்தில் 1000 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய ரூ.420 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு நலத்திட்ட உதவுகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரசு பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்காக புதிய பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட நிலையில் தற்போது புதிய பஸ்கள் வாங்குவதற்கான அரசாணையையும் போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் […]
நாளை முதல் 2022 வருடத்திற்கான டிசம்பர் மாதம் தொடங்குகிறது, இந்த மாதத்திற்கான வங்கி சார்ந்த வேலைகளை சரியாக திட்டமிட டிசம்பர் மாத வங்கிகளின் விடுமுறை நாட்கள் எப்போது என்று இந்த பதிவில் காண்போம். இந்தியாவில் செயல்பட்டு வரும் அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன. இதன் அடிப்படையில் ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்குமான வழிகாட்டு நெறிமுறைகளையும் வழங்கி வருகிறது. அத்துடன் வங்கிப் […]
இந்த உலகில் வினோத நிகழ்வுகள் ஆங்கங்கே நடப்பது அரிது, அப்படிப்பட்ட வினோத நிகழ்வுகள் மருத்துவ துறையையும் விட்டுவைப்பதில்லை, ஒரு குழந்தைக்கு இரண்டு தலைகள், கொம்புகள் வைத்திருக்கும் குழந்தை, வாலுடன் பிறந்த குழந்தை போன்ற வினோத நிகழ்வும் நடந்திருக்கிறது, இதற்கு என்ன காரணம் என்று மருத்துவ உலகத்துக்கே அறிய முடியவில்லை. அப்படி ஒரு வினோத நிகழ்வு தான் தற்போது நடந்துள்ளது. மெக்சிகோவின் நியூவோ லியான் மருத்துவமனையில் இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு […]
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது. சாமி வீதியுலாவை பக்தர்கள் தினமும் கண்டு மகிழ்கின்றனர். இந்த விழாவின் 10ஆம் நாளான டிசம்பர் 6 திருக்கார்த்திகை தீபம் அன்று மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும். இதனையொட்டி பொதுமக்கள் அனைவரும் அவர்களது வீடுகளில் விளக்கேற்றி கார்த்திகை தீபத்தை கொண்டாடுவர். இந்நிலையில், திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு வருகிற டிசம்பர் 6ஆம் […]