வட தமிழ்நாடு நோக்கி நகர்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஆந்திர மற்றும் வட தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. இதன் எதிரொலியாக தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், […]
திமுக-காங்கிரஸ் கூட்டணி நாடாளுமன்ற தேர்தலிலும் தொடரும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கூறியதாவது “மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் தாலுக்கா மருத்துவமனைகளில் டயலாசிஸ் வசதி அதேபோல் கேன்சர் […]
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், 2026 ஆம் ஆண்டு பாமக தலைமையில் நாங்கள் ஆட்சி அமைப்போம், அதற்கான யூகங்களை 2024 ஆம் ஆண்டு அமைப்போம் என்று கூறினார். தென்னக ரயில்வே மேலாளர் அலுவலகத்தில் தமிழக ரயில்வே திட்டங்கள் தொடர்பாக தென்னக ரயில்வே மேலாளர் ஆர்.என்.சிங்-ஐ நேரில் சந்தித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி […]
தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு மெட்ராஸ் ஐ பாதிக்கப்பட்டு 4000 முதல் 4500 வரை சிகிச்சைக்கு வருகிறார்கள். மேலும் இந்த நோயின் அறிகுறிகள் என்ன என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் மெட்ராஸ் ஐ பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனையில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மெட்ராஸ் ஐ குறித்த விழிப்புணர்வு கண்காட்சியை பார்வையிட்ட பின் […]
ஆந்திரா மற்றும் தெலுங்கனாவில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே சங்கராந்தி(பொங்கல்) ரிலீஸில் முன்னுரிமையில் தியேட்டர்கள் ஒதுக்க வேண்டும், டப்பிங் படங்களுக்கு மீதம் இருக்கும் தியேட்டர்கள் தான் தரப்படும் என தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கை தற்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்கி, விஜய் நடிக்கும் வாரிசு படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. வாரிசு படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் […]
தமிழகத்தில் ஒரு சில மின் நுகர்வோர் ஒருவருடைய பெயரிலே இரண்டுக்கும் மேற்பட்ட வீடுகள் அதாவது வாடகை வீடுகளுக்கு மின் இணைப்பை பெற்றுள்ளனர். அதனால் நுகர்வோர்களுக்கு ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ளது. அதில், ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை வைத்திருப்பவர்கள் கட்டாயம் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதேபோல ஒரு வீட்டிற்கு பல மின் இணைப்புகளை நுகர்வோர் வாங்கியுள்ளனர். இவர்கள் ஒரே ஆதார் எண்ணை […]
தீபாவளிப் பண்டிகையான அக்டோபர் 24ம் தேதி அரசு விடுமுறை. அதற்கு முந்தைய நாட்கள் சனி, ஞாயி எனவே பண்டிகைக்கு அடுத்த நாள் மக்களின் வசதியை கருத்தில் கொண்டு ஒரு நாள் கூடுதலாக விடுமுறை அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் பள்ளி கல்லூரி மாணவர்கள் வசதிக்காகவும் விடுமுறை வழங்க கோரிக்கை விடப்பட்டது. எனவே கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அரசு அக்டோபர் 25ம் தேதி விடுமுறை அளித்தது. இந்த விடுமுறையை ஈடுகட்ட வரும் சனிக்கிழமை […]
தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற தாழ்வுகளுடன் இருந்து வருகிறது. அந்த வகையில் இன்றைய நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை 160ரூபாய் உயர்ந்து ரூ.39,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா ஊரடங்கு, அதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. சர்வதேச முதலீட்டாளர் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியதால், தங்கத்தின் தேவை அதிகரித்து வந்தது.. அதன்பிறகு, விலை […]
கொரோனா ஊரடங்கு, அதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. சர்வதேச முதலீட்டாளர் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியதால், தங்கத்தின் தேவை அதிகரித்து வந்தது.. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம் இறக்கமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் […]
சென்னை வியாசர்பாடி பகுதியினைச் சேர்ந்தவர் பிரியா வயது 17, ராணி மேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தவர். தேசிய அளவிலான கால்பந்து போட்டிகளில் பங்கேற்று பல சாதனைகளை படைத்து வந்தவர். இவருக்கு அண்மையில் கால்பந்தாட்ட பயிற்சியின்போது காலில் சவ்வு விலகியதை அடுத்து சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பரிசோதனைக்காக சென்றிருந்தார். அங்கு மருத்துவர்களின் தவறான சிகிச்சை முறையினால் இரண்டு கால்களும் அகற்றப்பட்டு, அதன் பிறகும் உயிரை காப்பாற்ற முடியாமல், இன்று […]