ஜம்மு காஷ்மீரில் அடுத்த 24 மணி நேரத்தில் பனிச்சரிவு ஏற்பட வாய்ப்பு!… பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை!

ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள சில மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் பனிச்சரிவு ஏற்படும் என்று பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுதொடர்பாக அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் விடுத்துள்ள எச்சரிக்கை குறிப்பில், யூனியன் பிரதேசத்தின் தோடா, கிஷ்த்வார், பூஞ்ச் மற்றும் ராம்பான் ஆகிய மாவட்டங்களில் கடல் மட்டத்திலிருந்து 3500 மீட்டர் உயரத்தில் குறைந்த அபாய நிலை பனிச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக யூனியன் பிரதேசத்தில் உள்ள சில மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் பனிச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், மேலும் உத்தரவு வரும் வரை பனிச்சரிவு ஏற்படும் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

KOKILA

Next Post

உஷார்.. கூகுளில் கஸ்டமர் கேர் எண்ணை தேடும் போது கவனமா இருங்க.. லட்சக்கணக்கில் இழக்க நேரிடலாம்..

Fri Mar 31 , 2023
பொதுவாக, ஒரு கேள்வி நம் மனதில் எழும் போதோ அல்லது நமது சந்தேகங்களை தீர்க்க வேண்டும் என்றாலோ உடனடியாக நாம் கூகுளில் தேடத் தொடங்குவோம். நம் கேள்விக்கான பதிலை, அது தொடர்பான தகவல்களுடன் கூகுள் வழங்குகிறது.. எனவே கூகுள் தற்போது நம் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது.. ஆனால், கஸ்டமர் கேர் நம்பரை கூகுளில் தேடினால் ஆன்லைன் மோசடிக்கு ஆளாகலாம் என்று உங்களுக்கு தெரியுமா..? ஆம்.. போலி கஸ்டமர் கேர் […]
Cybercrime 1

You May Like