கல்லூரி மாணவர்களுக்கு அசத்தல் அறிவிப்பு..!! மெட்ரோ ரயிலில் சிறப்பு கட்டண சலுகை..!!

கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மெட்ரோ ரயிலில் சிறப்பு கட்டண சலுகை வழங்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.


சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதேசமயம் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவாயை ஈட்டுவதற்காக மெட்ரோ நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ரயில் நிலையம் அருகில் உள்ள கல்லூரி மாணவர்கள் முழுமையாக பயனடைய மெட்ரோ ரயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அனைத்து கல்லூரிகளுக்கும் மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் நேரடியாக சென்று கல்லூரி நிர்வாகம் மற்றும் மாணவர்களை நேரில் சந்தித்து பேசி வருகின்றனர்.

கல்லூரி மாணவர்களுக்கு அசத்தல் அறிவிப்பு..!! மெட்ரோ ரயிலில் சிறப்பு கட்டண சலுகை..!!

அதனால் மாணவர்களுக்கு டிக்கெட் கட்டண சலுகையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையின் மூலமாக மாணவ-மாணவிகள் சரியான நேரத்திற்கு பாதுகாப்பாகவும் விரைவாகவும் கல்லூரிக்கு சென்று திரும்ப முடியும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கல்லூரி மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CHELLA

Next Post

ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட விபரீதம்; மனைவியின் முடிவால் அதிர்ச்சியில் கணவன்..!

Sun Sep 25 , 2022
சென்னை பல்லாவரம் பகுதியில் வசித்து வருபவர் ஞானசெல்வன். இவரது மனைவி வகித்தாபுளோரா. இவர்களுக்கு இரண்டு பெண்குழந்தைகள் உள்ளனர். கணவன் ஞானசெல்வன் ஆன்லைனில் ரம்பி விளையாடி, 1000 ரூபாய் பணத்தை இழந்ததாக கூறப்படுகின்றது. இதனை அறிந்த வகித்தா கணவரிடம் இதுகுறித்து வாக்குவாதம் செய்துள்ளார். இதில் மனமுடைந்த அவர் வீட்டில் உள்ள அறையில் இருந்த மின்விசிறியில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த […]

You May Like