இஸ்ரேல் மற்றும் ஈரான் மோதலுக்கு மத்தியில் பாபா வாங்காவின் 2025 ஆம் ஆண்டுக்கான திகிலூட்டும் கணிப்புகள் வெளியாகி உள்ளது.
பிரபல தீர்க்கதரிசி பாபா வாங்கா தனது எதிர்கால கணிப்புகள் மூலம் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார். அவரின் கணிப்புகளில் பெரும்பாலானவை பலித்ததாக கூறப்படுகிறது. பல்கேரியாவில் வாழ்ந்து வந்த பாபா வங்கா, கண் பார்வையற்றவர். சிறு வயதில் அவர் கண் பார்வையை இழந்த போது அவருக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தி அவருக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது.. இப்போது, ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் தொடர்ந்து பதற்றங்கள் நிலவி வருவதால், பாபா வங்காவின் கணிப்பை சுட்டிக்காட்டி வருகின்றனர்.
“பால்கன்ஸின் நோஸ்ட்ராடாமஸ்” என்று அழைக்கப்படும் பாபா வங்கா, மேற்குக்கும் கிழக்குக்கும் இடையே ஒரு பெரிய போரை முன்னறிவித்தார்.. இது பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும். அவர் கூறினார்: “சிரியா வீழ்ந்தவுடன், மேற்குக்கும் கிழக்குக்கும் இடையே ஒரு பெரிய போரை எதிர்பார்க்கலாம். வசந்த காலத்தில், கிழக்கில் ஒரு போர் தொடங்கும், மூன்றாம் உலகப் போர் இருக்கும். கிழக்கில் நடக்கும் இந்த போரில் மேற்கை கிழக்கு அழிக்கும்..” என்று கணித்திருந்தார்.
2025 ஆம் ஆண்டில் ஏலியன்கள் மனிதர்களுடன் தொடர்பு கொள்வார்கள் என்றும், தகவல்தொடர்புகளில் புரட்சியை ஏற்படுத்தும் டெலிபதியின் வளர்ச்சி குறித்தும் பாபா வங்கா கணித்துள்ளார்.
பாபா வங்காவின் மற்ற கணிப்புகள் என்னென்ன?
அமெரிக்காவின் 44வது ஜனாதிபதி ஆப்பிரிக்க அமெரிக்கராக இருப்பார் என்று பாபா வங்கா கணித்தார்.. அதன்படி பராக் ஒபாமா அமெரிக்கா அதிபரானார். அமெரிக்காவில் நடந்த 9/11 தாக்குதல், பிரெக்ஸிட், 2004 ஆம் ஆண்டு பேரழிவு தரும் சுனாமி மற்றும் இளவரசி டயானாவின் மரணம் பற்றி அவர் துல்லியமாக கணித்திருந்தார்.
இருப்பினும், பாபா வங்காவின் அனைத்து கணிப்புகளும் உண்மையாகவில்லை, அதாவது 2010 மற்றும் 2014 க்கு இடையில் மூன்றாம் உலகப் போர் நிகழும் என்று பாபா வங்கா ஒரு முறை கணித்தார், ஆனால் அதிர்ஷ்டவசமாக இது நடக்கவில்லை..
2023 இல் வேற்றுகிரகவாசிகள் பூமியில் தரையிறங்கி போரை தொடங்கும் ஆசியா முழுவதையும் மாசுபடுத்தும் பேரழிவு தரும் அணுமின் நிலைய வெடிப்பு போன்ற சில தவறான கணிப்புகளையும் அவர் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : “போர் நிறுத்தம் அமலில் இருக்கு.. அதை மீறாதீங்க..” ஈரானின் தாக்குதலுக்கு பிறகு டிரம்ப் கருத்து..