மோசமான வானிலை!. இந்திய வீரர் சுப்ன்ஷு சுக்லாவின் ஆக்சியம்-4 மிஷன் ஒத்திவைப்பு!. புதிய தேதி அறிவிப்பு!

Subhash Shuklas 11zon

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா இன்று விண்வெளிக்கு செல்ல இருந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆக்சியம் மிஷன் என்பது அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா மற்றும் இந்தியாவின் இஸ்ரோவின் கூட்டு முயற்சியாகும். மோசமான வானிலை காரணமாக, விண்வெளி பயணம் நாளைக்கு (ஜூன் 11) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


இந்தியா சார்பில் விண்வெளிக்கு சென்ற முதல் விண்வெளி வீரர் என்ற பெருமையை பெற்றவர் ராகேஷ் சர்மா. இவர் 1984ஆம் ஆண்டில் சோவியத் யூனியனின் சோயுஸ் 11 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு சென்றார். அதற்கு பிறகு விண்வெளிக்கு செல்லும் 2ஆவது இந்தியர் என்ற பெருமையை சுபான்ஷு பெற உள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட், டிராகன் என்ற விண்கலனை ஏந்திக்கொண்டு அமெரிக்காவிலுள்ள கென்னடி ஏவுதளத்தில் இருந்து புறப்பட்டு இன்று விண்வெளிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டிருந்தது.

இதில் இந்திய வீரர் உட்பட 4 நாட்டு வீரர்கள் செல்ல உள்ளனர். இந்த 4 பேரும் 14 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து ஆய்வுகள் மேற்கொள்ள உள்ளனர். இந்த 4 பேரில் இந்திய வீரர்தான் விண்கலனின் செயல்பாடுகளை கண்காணிக்கும் பொறுப்பில் இருப்பார். இந்த விண்வெளி திட்டம் வெற்றியடைய இறைவனிடம் வேண்டிக்கொள்ளுமாறு இந்திய மக்களிடம் சுபான்ஷு சுக்லா கேட்டுக்கொண்டுள்ளார். நுண்ணிய புவிஈர்ப்பு விசை குறித்த 7 ஆய்வுகளை இப்பயணத்தின்போது மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தான் இந்தப் பயணத்தை மண்ணுக்கும் விண்ணுக்கும் அமைக்கும் பாலமாக கருதுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், மோசமான வானிலை காரணமாக, விண்வெளி பயணம் நாளைக்கு (ஜூன் 11) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் இருந்து இந்த தகவலை வெளியிட்டது. புதிய தேதி ஜூன் 11 ஆம் தேதி மாலை 5:30 மணி என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Readmore: விவசாயிகளே..!! கூட்டுறவுத்துறையில் பயிர்க் கடன் வாங்க போறீங்களா..? அப்படினா இதை கண்டிப்பா படிங்க..!!

KOKILA

Next Post

வைகாசி பௌர்ணமி விரதம்!. கிரிவலம் செல்லும் முறை இதுதான்!. செய்ய வேண்டியவை!. செய்யக்கூடாதவை!

Tue Jun 10 , 2025
ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி தினம் வரும். முழு பிரகாசத்துடன் ஒளி வீசும் சந்திர பகவானை தரிப்பதன் மூலமும், அவருக்கு ஒளி தரக்கூடிய சூரியனை வழிபட்டும் அருள் பெறலாம். இந்த பெளர்ணமி ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கிழமைகளில் வரும். அந்த கிழமைகளுக்கு என்று தனி சிறப்பும் பரிகாரங்களும் உள்ளன. அந்தவகையில், சித்திர குப்தனின் பிறந்த நாளாக சித்திரை பௌர்ணமி கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் விளக்கேற்றி வழிபாடு செய்ய நீடித்த ஆயுள் கிடைக்கும். […]
vaikasi paurnami 11zon

You May Like