நேற்று ஷாருக் கான் நடித்த ‘பதான்’ திரைப்படத்தைத் திரையிடுவதற்கு இடையூறு விளைவித்ததற்காக, ஒன்பது பஜ்ரங் தள உறுப்பினர்களை போலீசார் கைது செய்தனர். போராட்டக்காரர்கள் திரையரங்கு கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதுடன், திரைப்பட போஸ்டர்களை கிழித்தெறிந்தனர். இதை எடுத்து சம்பவ இடத்திற்கு வையுங்கள் போலீசார் உடனடியாக கைது செய்தனர்.
காவல்துறையின் கூற்றுப்படி, பஜ்ரங் தள் உறுப்பினர்கள் ஃபரிதாபாத் செக்டார் 35 இல் ஒன்றுகூடி, படம் திரையிடப்பட்ட கிரவுன் இன்டீரியர்ஸ் மால் நோக்கி அணிவகுத்துச் சென்ற பின்னர் இந்த சம்பவம் நடந்ததாக கூறியுள்ளனர்.பின்னர் திரையரங்குக்குள் நுழைந்த அவர்கள் படத்தைப் புறக்கணிப்பதாக கோஷங்கள் எழுப்பினர்.
இதனால் படம் பார்க்க வந்த பலர் திரையரங்கை விட்டு வெளியேறின ர் சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்தவுடன் விரைந்து சென்று அவர்களை கைது செய்வதாக தெரிவித்துள்ளனர்.