விதிகளை மீறிய வங்கிகள்!… அபராதம் விதித்து ஆர்பிஐ அதிரடி!… இதையும் மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும்!

கடன் மீட்பு முகவர் தொடர்பான விதிகளைப் பின்பற்றாத காரணத்தால் ஆர்பிஎல் வங்கிக்கு ரூ.2.27 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


ஆர்பிஐ வங்கின் கீழ் இயங்கிவரும் அனைத்து தனியார் வங்கிகளின் வழிமுறைகள், வட்டி விகிதம் என அனைத்தையும் ரிசர்வ் வங்கி கவனித்து வருகிறது. தற்போது சில வங்கி விதிமுறைகளை மீறியதற்காக ஹெச்டிஎஃப்சி லிமிடெட் (HDFC) வங்கி மீது ரிசர்வ் வங்கி அபராதம் விதித்திருக்கிறது. மேலும், கடன் மீட்பு முகவர் தொடர்பான விதிகளைப் பின்பற்றாத காரணத்தினால் ஆர்பிஎல் (RBL ) வங்கி மீதும் ரூ.2.27 கோடி அபராதத்தை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.

அபராதம் விதிக்கப்பட்டது கூறித்து பதிலளித்துள்ள ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான நியாயமான நடைமுறைகள் குறியீடு, வங்கிகளின் கிரெடிட் கார்டு செயல்பாடுகள், இடர் மேலாண்மை, நிதி சேவைகள் மற்றும் மீட்பு முகவர்களின் அவுட்சோர்சிங் ஆகிய விதிமுறைகளுக்கு உட்படாத காரணத்தினால் அபராதம் விதித்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், இந்த விதிமுறைகள் தொடர்ந்து மீறப்படும் போது வங்கிகளுக்கான உரிமத்தையும் ரத்து செய்ய நேரிடும் எனவும் ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இந்த விதிமீறல் அபராத பிரச்சனைகளால் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இருக்காது எனவும் டெபாசிட் பணத்துக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

KOKILA

Next Post

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு உணவில் இந்த 6 பொருட்களை சேர்த்து கொள்ளுங்கள்!...

Wed Mar 22 , 2023
குழந்தைகள் ஆரோக்கியமாக வளரும் சில உணவுப் பொருட்கள் குறித்தும் அவற்றின் நன்மைகள் குறித்தும் பார்க்கலாம். இன்றைய சூல்நிலைகளில் குழந்தைகள் சரியாக சாப்பிடுவது இல்லை. இருப்பினும் ஆரோக்கியமான உணவுகளை தவிர்த்து ஸ்நாக்ஸ் ஐட்டங்களையே குழந்தைகள் அதிகளவில் விரும்பி சாப்பிடுகின்றனர். குழந்தைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். பொதுவாகவே சாப்பாடு கொடுப்பதை விட ஆரோக்கியம் நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பாடுடன் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். அந்தவகையில் குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவில் இந்த பொருட்களை சேர்த்து […]
Postivie Parenting Scrips feature

You May Like