ஜாக்கிரதை!. சாலையில் கிடக்கும் இந்த பொருட்களை தாண்டி செல்லாதீர்கள்!. ஏன் தெரியுமா?.

road vastu tips

சில நேரங்களில் நாம் கடந்து போகும் பொருட்களால் எதிர்மறையான சக்திகள் நம்மை தொடர வாய்ப்பு உள்ளது. இதனால் வீட்டில் கஷ்டம், துக்கம், கண்ணீருடன் கூடிய சில விடயங்கள் நடக்கலாம். ஜோதிட சாஸ்த்திரத்தின்படி, சாலையில் கிடக்கும் சில பொருட்களை எடுப்பது மங்களம் உண்டாகும் என எமது முன்னோர்கள் நம்புகிறார்கள். நம்பிக்கையின் படி, சாலையில் கிடக்கும் சில பொருட்களை நாம் கடக்கக்கூடாது. சாலையில் கிடக்கும் இந்தப் பொருட்களைக் கடப்பது வாழ்க்கையில் பிரச்சினைகளை உண்டுபண்ணும்.


ஹோமம் – ஹவானா செய்யும் பொழுது வீட்டு அடுப்பில் உள்ள சாம்பலை சாலையில் வீசப்படுவது வழக்கம். இதனை பலமுறை கவனித்தும் கண்டுக் கொள்ளாமல் அதனை மிதித்துக்கொண்டு கடந்து செல்வோம். இது வீட்டுக்கு கஷ்டங்களை கொண்டு வரும். ஏனெனின் சாம்பல் நெருப்பினால் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதால் கடவுளாக பார்க்கப்படுகிறது. இதனால் இதனை மிதிப்பது, கடப்பது பிரச்சினையை உண்டுபண்ணும்.

வாகனங்கள் மற்றும் புதிய வீடுகளில் எலுமிச்சை மற்றும் மிளகாய் கட்டுவார்கள். இதனை கண்ணில் படாமல் வீசுமாறு கூறுவார்கள். அப்படி வீசப்படும் எலுமிச்சை மற்றும் மிளகாய் எதிர்மறையை சக்தியை ஈர்க்கும் ஆற்றல் கொண்டது. எனவே, சாலையில் எலுமிச்சை மற்றும் மிளகாய்கள் கிடப்பதைக் கண்டால் அதைக் கடக்க வேண்டாம்.

வெளியில் முக்கியமான வேலைகளுக்கு செல்லும் பொழுது சாலையில், தலைமுடி இருப்பதை பார்த்தால் அது உங்களின் வேலையை தடைகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என்பதனை உணர்த்துகிறது. இது மிகவும் மோசமான அறிகுறி என்பதனை பலரும் அறிந்திருக்கமாட்டார்கள். தப்பிதவறி சாலையில் தலைமுடி கிடக்கும் பொழுது கையால் எடுப்பதை தவிர்க்கவும். மாறாக சாலையில் முடி இருப்பதை கண்டால் அதனை கடக்காமல் வேறு வழியில் செல்வது சிறந்தது.

குளிக்கும் தண்ணீரை சாலையில் இருந்தாலும், வீட்டில் குளிக்கும் நீர் சாலையின் குறுக்கே ஓடிக்கொண்டிருந்தாலும், அத்தகைய நீரை கடக்கக்கூடாது. அப்படிப்பட்ட குளியல் நீரை மறந்துவிட்டு கடந்தால் அது நமது நிதி நிலைமையில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

Readmore: முதலில் இந்த பொருட்களை வீட்டில் இருந்து தூக்கிப்போடுங்கள்!. வறுமை நீங்கும்!.

KOKILA

Next Post

பெண்களே!. தலைமுடியை விரித்து போடுவதால் வீட்டில் என்ன கஷ்டம் வரும் தெரியுமா?

Sat Jun 7 , 2025
பெண்கள் மகாலட்சுமியின் அம்சம். பார்த்தாலே லட்சுமி கடாட்சமாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். பின்னல் என்பது உறவைக் குறிக்கிறது. முடியை விரித்து விடுவது அமங்கலமானது. அதாவது முடி என்பது அழகான கூந்தல். அந்த கூந்தலை பின்னி பூ வைத்து பார்ப்பதன் அழகே தனி. ஆனால் இன்றைய சூழலில் பலரும் தலைமுடியை விரித்துப்போட்டுக்கொண்டுதான் அலைகின்றனர். தன்னை மறைத்து இரு வீட்டாரையும் இணைத்து அழகுற தோற்றமளிக்கச் செய்வதே இதன் பொருளாகும். தன்னை முன்னிறுத்தும் […]
free hair

You May Like