சுரங்க பாதையில் தேங்கிய மழை நீரில் மூழ்கி இளம் பெண் உயிரிழப்பு…! ஓடோடி சென்ற முதல்வர் சித்தராமையா…!

பெங்களூருவில் சுரங்க பாதையில் தேங்கிய மழை நீரில் மூழ்கி இளம் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரு கேஆர் சர்க்கிள் பகுதியில் உள்ள சுரங்க பாதையில் மூழ்கி உயிரிழந்த 23 வயது பெண் பானுரேகாவின் குடும்பத்தினரை கர்நாடக முதல்வர் சித்தராமையா சந்தித்து ஆறுதல் கூறினார். பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக நகரின் பல பகுதிகளில் கடுமையான தண்ணீர் தேங்கியது.


மழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன மற்றும் KR வட்டம் பகுதியில் உள்ள சுரங்க பாதையில் கடுமையான தண்ணீர் தேங்கியது. முன்னதாக, சுரங்க பாதையில் சிக்கிய பலர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.

Vignesh

Next Post

மக்களே..!! இனி ரூ.2,000 நோட்டை ஈசியாக மாற்றலாம்..!! ரிசர்வ் வங்கி சொன்ன குட் நியூஸ்..!!

Mon May 22 , 2023
ரூ.2000 நோட்டுகளை மாற்ற சிறப்பு கவுண்டர் அமைக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, பொதுமக்கள் மே மாதம் 23ஆம் தேதியில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும், 2023 செப்டம்பர் 30ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்நிலையில், வாடிக்கையாளர்களின் வசதிக்காக […]
money

You May Like