அட !அட! அட! என்ன அழகு… ’பாரதிகண்ணம்மா ’ ஹேமா .. குந்தவையாக மாறி ஆடிய ஆட்டம்…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடரில் வரும் ஹேமா குட்டி குந்தவையாக மாறி எவ்வளோ , க்யூட்டா ஆடுறாங்க …


விறுவிறுப்பான கதைக்களத்துடன் நகர்ந்துகொண்டிருக்கும் தொடர்களில் பாரதிக்கண்ணம்மாவும் ஒன்று. இதில் ஹோமாவும் , லட்சுமியும் ரொம்ப அழகா நடித்து அந்த கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவகையில் முகபாவனைகளை காட்டி ரசிகர்களை ஈர்த்து வருகின்றனர்.

சமீபத்தில் யூ டியூபில் இவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ராட்சஸ மாமனே பாடலுக்கு நடனமும் ஆடியுள்ளார். குந்தவை போல ஒப்பனை செய்து அவர் ஆடிய க்யூட்டான ஆட்டம் வைரலாகி வருகின்றது.

இத்தொடர் கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கி 5 வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கிறது. அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பதால் பலருக்கும் இந்த நாடகத்தை பார்க்க சலிப்பு ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் கண்ணம்மாவாக ரோஷினி நடித்து வந்தார்.

பின்னர் அவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்ததாக கூறப்பட்டது. இதனால் பாரதி கண்ணம்மாவில் இருந்து விலகினார். ஆனால் , சினிமாவிற்று செல்லமல் வேறு சில வாய்ப்புக்காக காத்திருந்தார். அப்போது விஜய்டிவியில் இருந்தே குக் வித்கோமாளிக்கு சென்றார்.

இந்த தொடரில் பாரதியின் மகளாக ஹேமா நடித்து வருகின்றார். லட்சுமி தன் உடன் பிறந்த அக்காதான் என்பது இதுவரை அவருக்கு தெரியாது. சமையல் அம்மா என அழைக்கும் கண்ணம்மாதான் தன் அம்மா என்பதும் தெரியாது. தன குழந்தையே இல்லை என கூறும் பாரதி உண்மையிலேயே சொந்த அப்பாதான். ஆனால் பாரதிக்கு ஹேமாதான் தன் சொந்த மகள் என்பதும் இதுவரை தெரியாது. ஒரு டிஎன்ஏ சோதனையை எடுக்கத் தயங்கும் பாரதியால் கதைக்களம் ஜவ்வு போல் இழுத்துக் கொண்டே செல்வதாக ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். இருந்தாலும் ஹேமா , லக்‌ஷ்மி க்யூட்டான நடிப்பால் கதையை நகர்த்துகின்றனர்.

https://youtu.be/FQqbwg1Pp1A
Subscribe to my YouTube Channel

Next Post

தாயின் கண்முன் நடந்த பயங்கரம்.. சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை…

Tue Oct 11 , 2022
            ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் மைனர் சிறுமி ஒருவர் தனது தாய்க்கு முன்பாக ஐந்து பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட மாநிலம் தும்கா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியும் அவரது தாயும் ஞாயிற்றுக்கிழமை தியோகரில் ஒரு விழாவில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது மதுபூர் பகுதியில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். மர்மநபர்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் […]

You May Like