குஜராத் மாநில முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவி ஏற்க உள்ளார்.
குஜராத் மாநில தலைநகரில் இன்று நடைபெறும் முதல்வர் பூபேந்திர படேலின் பதவியேற்பு நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். மேலும் நிகழ்ச்சியில் பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்து குறைந்தது 20 முதல்வர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காந்திநகரின் புதிய செயலக கட்டிடத்தில் உள்ள ஹெலிபேட் மைதானத்தில் நடைபெறும் விழாவில், குஜராத்தின் 18வது முதல்வராக பூபேந்திர பட்டேலுக்கு ஆளுநர் ஆச்சார்யா தேவ்வ்ரத் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த நிகழ்வில் புதிய அமைச்சர்கள் சபையும் பதவியேற்கவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா மற்றும் 10-15 கேபினட் அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை ஐஏஎஸ் அதிகாரிகள் குழு கண்காணித்து வருகிறது, இதற்காக ஹெலிபேட் மைதானத்தில் 20,000 பேர் அமரும் வகையில் தற்காலிக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.