தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் விதமாக ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்டங்களிலும் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால், ஏராளமான இளைஞர்கள் பயனடைந்து வருகின்றன. அந்தவகையில், திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற் நெறி வழிகாட்டும் மையத்தில் இன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாகவும், இதில் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் காலை 10 மணியளவில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 20-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான பணியாட்களை தேர்ந்தெடுக்க இருக்கின்றனர். இந்த முகாமில் 10, 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் கலந்துகொண்டு வேலைவாய்ப்பினை பெற்று பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.