நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் காலமானார். கடந்த 3 ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில், இன்று காலை 3.15 மணியளவில் காலமானார். நடிகர் அஜித்குமார் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவருடைய தந்தை சுப்பிரமணியம் – தாய் மோகினி சென்னையில் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில், அஜித்தின் தந்தை சுப்பிரணியம் கடந்த 2020இல் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.
கடந்த 3 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெசன்ட் நகரில் உள்ள அஜித்தின் வீட்டில் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.