புதுச்சேரியில் பாஜக நியமன MLA-க்கள் 3 பேர் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராமலிங்கம், வெங்கடேசன், ரமேஷ் பாபு ஆகியோர் தங்களது ராஜினாமா கடிதத்தை சபா நாயகரிடம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி அமைச்சரவையிலும் மாற்றம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
இவர்கள் ராஜினாமா செய்ததற்கான தெளிவான காரணம் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், பாஜக மாநிலக் குழுவில் இடம்பெறும் உள்கட்சி முரண்பாடுகள், அமைச்சரவை பதவிக்கு இடமாற்றங்கள், மற்றும் அணிச்சேர்க்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட சில முக்கிய காரணிகள் பின்னணியாக இருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் சந்தேகம் தெரிவிக்கின்றன.
புதுச்சேரியில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக – என்ஆர்காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தது. அதன்பின், மூன்று நபர்கள் நியமன எம்எல்ஏக்களாக பதவியேற்றனர். இப்போது அவர்களில் மூவரும் ராஜினாமா செய்திருப்பது புதுச்சேரி அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.