13 வயது மகளை கள்ளக்காதலனுக்கு இரையாக்கிய பாஜக பெண் பிரமுகர்..!! தாய் கண்முன்னே ஒரே நேரத்தில் 8 முறை பலாத்காரம்..!!

Rape 2025 5

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் பாஜக பெண் பிரமுகர் ஒருவர் தனது 13 வயது மகளை, கள்ளக்காதலன் உள்ளிட்டோருக்கு விருந்தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாஜக பெண் அரசியல்வாதி, சில ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவரை பிரிந்தார். பிறகு, தனது 13 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார். அப்போது, அந்த பெண்ணுக்கும் வேறு ஒருவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.


இதனால், இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது, கள்ளக்காதலியின் 13 வயது மகள் மீது காதலனுக்கு விபரீத ஆசை வந்துள்ளது. இதனால், காதலி வீட்டில் இல்லாத சமயத்தில் அந்த சிறுமியை கள்ளக்காதலன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பிறகு இந்த விஷயம் பெண் பிரமுகருக்கு தெரியவந்த நிலையில், அவர் எதுவும் தெரியாததுபோல், பெற்ற மகளை கள்ளக்காதலுக்கு அடிக்கடி இரையாக்கியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, சிறுமியை ஆக்ரா, பிருந்தாவன் உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்துச் சென்று விடுதியில் வைத்து பெண் பிரமுகரின் கள்ளக்காதலனும், மற்றொரு நபரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இச்சம்பவம் சிறுமியின் தாய் கண்முன்னே தான் நிகழ்ந்துள்ளது. தொடர்ந்து, 8 முறை அந்த சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். மேலும், இதை யாரிடமாவது சொன்னால், உனது அப்பாவை கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.

ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் இதை தாங்கிக் கொள்ள முடியாத சிறுமி, நடந்ததை தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனே காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து பாஜக பெண் பிரமுகரையும், அவரது காதலனையும் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Read More : “ஓஹோ.. கல்யாணமே பண்ணிட்டாங்களா”..? வைரலாகும் ரவி மோகன் – கெனிஷாவின் திருமண புகைப்படம்..?

CHELLA

Next Post

மகா கும்பமேளா முதல் ஹத்ராஸ் துயரம் வரை.. நாட்டையே உலுக்கிய 5 கூட்ட நெரிசல் சம்பவங்கள் இதோ..!!

Thu Jun 5 , 2025
ஐபிஎல்லில் ஆர்சிபி வெற்றி பெற்ற பிறகு, சின்னசாமி மைதானத்தில் ஒரு வெற்றி அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் சோகத்தையும் அதிச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது இது முதல் முறையல்ல. கோயில்களில் நெரிசல் ஏற்பட்டு பலர் உயிரிழந்த சம்பவங்கள் இதற்கு முன்னரும் நடந்துள்ளன.  அவ்வாறு சமீபத்திய ஆண்டுகளில் நடந்த சம்பவங்கள் பற்றி பார்க்கலாம். மகா […]
stampede incidents 1

You May Like