குஜராத்தில் மருந்து நிறுவனத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ரசாயன டேங்கரில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீ விபத்தில் ஒரு ஒப்பந்தத் தொழிலாளி உயிரிழந்தார் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரசாயனங்கள் நிரப்பப்பட்ட ஒரு பெரிய தொட்டியில் கசிவு ஏற்பட்ட கசிவு காரணமாக, விபத்து நிகழ்ந்தது., அதைத் தொடர்ந்து பெரிய தீ விபத்து மாலை 4 மணியளவில் ஏற்பட்டது. அம்பர்நாத்தில் உள்ள தொழிற்சாலை வளாகம் நவி மும்பையைச் சேர்ந்த புளூ ஜெட் ஹெல்த்கேர் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானது என்று உதவி காவல் ஆய்வாளர் சந்தீப் பலேராவ் தெரிவித்தார்.
கல்யாண் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்புப் படையினர், ஒரு மணி நேரத்திற்குள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்., மேலும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திலிருந்து ஒப்பந்தத் தொழிலாளியின் உடலை மீட்டனர், நான்கு தொழிலாளர்கள் தீ காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.