‘பிளாக்பஸ்டர்’!. 9 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது ஆர்சிபி!. குவாலிஃபையர்-1ல் பஞ்சாப்பை வீழ்த்தி அபாரம்!.

RCB VS Punjab 11zon

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐபிஎல் 2025 இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.


நடப்பாண்டு ஐபிஎல் தொடரில், புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணிக்கும், ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூர் அணிக்கும் இடையேயான முதல் குவாலிஃபையர் போட்டி நேற்று(மே.29) நடைபெற்றது. இரு அணிகளும் இதுவரை நடந்த 17 ஐபிஎல் தொடரில் ஒரு முறை கூட கோப்பை வெல்லாத நிலையில், இன்று நேரடியாக பைனலுக்கு செல்வதற்கான வாய்ப்புக்காக மோதுகின்றன. அதனால், இப்போட்டி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்தது.

இந்த சூழலில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டி பஞ்சாப் மகாராஜா யாதவீந்திர சிங் மைதனாத்தில் நடந்து வருகிறது. இப்போட்டிக்கான டாஸை வென்ற பெங்களூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. முதலில் களமிரங்கிய பஞ்சாப் அணி 78 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தொடக்கத்தில் இருந்தே தடுமாறியது. பெங்களூர் அணியின் அபாரமான பந்து வீச்சால் 14.1 ஓவர்களியேயே பஞ்சாப் அணி ஆல் அவுட்டாகி சுருண்டது. இதன் மூலம் மொத்தமாக 101 ரன்கள் என்ற குறைந்தபட்ச ரன்களை பஞ்சாப் அணி அடித்திருந்தது. பெங்களூர் அணி சார்பில் ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் சுயாஷ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், யாஷ் தயாள் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.

102 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு, விராட் கோலி (12) ஏமாற்றம் அளித்தார். அர்ஷ்தீப் சிங் வீசிய 3வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த பில் சால்ட், ஜேமீசன் வீசிய 6வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். முஷீர் கான் பந்தில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த மயங்க் அகர்வால் 19 ரன்னில் அவுட்டானார். அபாரமாக ஆடிய சால்ட், 23 பந்தில் அரைசதம் எட்டினார். முஷீர் கான் பந்தை சிக்சருக்கு அனுப்பிய கேப்டன் ரஜத் படிதர் வெற்றியை உறுதி செய்தார். பெங்களூரு அணி 10 ஓவரில், 2 விக்கெட்டுக்கு 106 ரன் எடுத்து வெற்றி பெற்றது. சால்ட் (56), படிதர் (15) அவுட்டாகாமல் இருந்தனர்.

இதன் மூலம், பெங்களூரு அணி 9 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. இதற்கு முன்பு, ஆர்சிபி அணி 2016 ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடியது. அதன் பிறகு, பெங்களூரு அணி பல முறை பிளேஆஃப்களுக்கு முன்னேறியது, ஆனால் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூரு அணி 4வது முறையாக பிரிமியர் தொடரின் பைனலுக்குள் நுழைந்தது. முன்னதாக விளையாடிய 3 பைனலிலும் (2009, 2011, 2016) தோல்வியடைந்து, 2வது இடம் பிடித்தது.

பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாலும், ஐபிஎல் 2025-ல் இருந்து அவர்கள் வெளியேறவில்லை. புள்ளிகள் பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடித்ததன் பலனை பஞ்சாப் அணி பெறும். இப்போது பஞ்சாப் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான எலிமினேட்டர் போட்டியின் வெற்றியாளரை இரண்டாவது தகுதிச் சுற்றில் எதிர்கொள்ளும்.

Readmore: இளைஞர்களை அதிகமாக பாதிக்கும் பெருங்குடல் புற்றுநோய்.. முதற்கட்ட அறிகுறிகள் இவைதான்..!! அலட்சியம் வேண்டாம்

1newsnationuser3

Next Post

மறந்து கூட விளக்கை இந்த நாட்களில் சுத்தம் செய்யாதீங்க!. ஏன்?. எப்போது செய்ய வேண்டும் தெரியுமா?.

Fri May 30 , 2025
நம் வீட்டில் கடவுளை வழிப்படும் போது ஏற்றும் விளக்கு எந்த நாட்களில் அதனை சுத்தம் செய்ய வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்ளலாம். தெய்வீகமான குத்துவிளக்கின் அடிப்பாகத்தில் ஸ்ரீ பிரம்மாவும், அதன் நடுப்பகுதியான தண்டு பாகத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணுவும், விளக்கின் மேல் பாகத்தில் ஸ்ரீ சிவபெருமானும் உறைவதாகச் நம்பிக்கை. குத்துவிளக்கில் அலைமகள், மலைமகள், கலைமகள் ஆகிய முப்பெரும் தேவியரும் இன்னும் சில சக்திகளும் குடிகொண்டு உள்ளார்கள் என்று போற்றப்படுவதால், குத்துவிளக்கு, கடவுளின் அம்சமாகவே […]
pooja thinks clean 11zon

You May Like