மெரினாவில் கரை ஒதுங்கிய உடல்..!! உடனே தடை செய்யுங்கள்..!! சிக்கியது பரபரப்பு கடிதம்..!!

சென்னை கேகே நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (40). இவர், பிரிண்டர் மற்றும் ஜெராக்ஸ் எந்திரங்களுக்கு மை விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ராதா (37). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி வெளியே சென்ற சுரேஷ், பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மனைவி ராதா போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், சுரேஷை தேடி வந்தனர். ‘அப்பொழுது மனைவி வீட்டில் இருந்த உடைமைகளை பரிசோதனை செய்த பொழுது சுரேஷ் எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தில், நான் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பல லட்சம் இழந்துவிட்டேன். வாழத் தகுதியற்ற நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன், நீங்கள் என்னை மன்னித்து விடுங்கள், இந்த ஆன்லைன் ரம்மியை தடை செய்யுங்கள் நான் மண்டியிட்டு கேட்டுக்கொள்கிறேன்” என்று எழுதியிருந்தது. தொடர் விசாரணையில், அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.16 லட்சம் இழந்தது தெரியவந்தது.


இந்நிலையில், மெரினா கடற்கரையில் ஆண் சடலம் கரை ஒதுங்கியது. காவல்துறையினர், சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அது மாயமான சுரேஷ் என்பதும், அவர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. ஆன்லைன் ரம்மி மூலம் ரூ.16 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டதாகவும் இதனால் அதிக அளவு கடன் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

CHELLA

Next Post

”உன் கூடவே எத்தன நாளைக்கு பண்றது”..!! கள்ளக்காதலை முறித்துக் கொண்ட பெண் கொடூர கொலை..!!

Mon Mar 6 , 2023
கள்ளக்காதல் விவகாரத்தில் பாமக மகளிரணி நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ரெங்கசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் முத்தையா. இவரது மனைவி சண்முகத்தாய் (70). இவர்களது மகள் மாரியம்மாள். இவர் குருவிகுளம் யூனியன் பாமக மகளிர் அணி தலைவியாக இருந்து வந்தார். மேலும், இவர் கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இதனிடையே, […]

You May Like