கொதிக்க கொதிக்க மீன் குழம்பு..!! மனைவி முகத்தில் ஊற்றிய கணவன்..!! மாந்திரீகத்தால் துடிதுடித்துப்போன பெண்..!!

Crime 2025

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சடையமங்கலம் அருகே வைகல் பகுதியைச் சேர்ந்தவர் சஜீர். இவரது மனைவி ரஜிலா கஃபூர் (36). நேற்று காலை வீட்டில் இருந்த சஜீர், தனது மனைவி ரஜிலாவிடம் சில வினோதமான கோரிக்கைகளை வைத்துள்ளார். அதன்படி, ரஜிலா தனது கூந்தலை தளர்த்திவிட்டு, தனக்கு முன்னால் அமர வேண்டும் என்றும், ஒரு மாந்திரீகர் கொடுத்த ஆபரணத்தை அணிந்து, சாம்பலை முகத்தில் பூச வேண்டும் என்றும் அவர் வற்புறுத்தியுள்ளார்.


ஆனால், இந்தக் கோரிக்கைக்கு ரஜிலா சம்மதம் தெரிவிக்க மறுத்துள்ளார். கடந்த சில காலமாக சஜீர் மாந்திரீகம் மற்றும் சடங்குகளில் அதிக ஈடுபாடு காட்டி வந்ததாக கூறப்படுகிறது. மனைவி தனது பேச்சை கேட்க மறுத்ததால் கோபத்தின் உச்சிக்குச் சென்ற சஜீர், சமையலறையில் அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த மீன் குழம்பு சட்டியுடன் தூக்கி வந்து, ரஜிலாவின் முகத்தில் ஊற்றித் தாக்கியுள்ளார்.

இதையடுத்து, ரஜிலாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து, காயமடைந்த அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. சஜீர் தனது மனைவியைப் பிசாசு பிடித்திருப்பதாக நம்பி, பலமுறை அவரைத் தாக்கி வந்துள்ளார்.

இது தொடர்பாக ரஜிலா ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அப்போது சஜீரை எச்சரித்த போதிலும், அவர் மாந்திரீகர்களை அணுகி, மனைவிக்குச் சூனியம் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது, இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவான சஜீரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Read More : கரூரில் சோகம்..!! நிலைதடுமாறிய மினி லாரி..!! சக்கரத்தில் சிக்கி துடிதுடித்து உயிரிழந்த 3 தொழிலாளர்கள்..!!

CHELLA

Next Post

Flash : இபிஎஸ் எடுத்த முடிவுகளால் தான் அதிமுக தோல்வி அடைந்தது.. செங்கோட்டையன் ஓபன் டாக்..!

Sat Nov 1 , 2025
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது “ எம்ஜிஆரின் பாராட்டுகளை பெற்றவன் நான்.. ஜெயலலிதா காட்டிய திசையில் கட்சிக்காக இரவு பகலாக உழைத்தேன்.. விசுவாசமாக இருந்ததால் தான் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பல்வேறு பொறுப்புகளை தந்தனர். அதிமுக உடைந்துவிட கூடாது என்பதற்காக இரண்டு முறை கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தவில்லை.. இபிஎஸ் பொதுச்செயலாளராக இருந்த போது அவர் எடுத்த முடிவுகளால் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்தது. பொதுச்செயலாளராக தேர்தல் […]
sengottaiyan eps

You May Like