ரஷ்யா அடுத்தகட்ட போர் திட்டங்கள் குறித்து அறிவிப்புகள் வெளி வந்துள்ள நிலையில் உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் அடுத்தது 2 பலத்த குண்டுகள் வெடித்ததால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ரஷ்யா- உக்ரைன் போர் நடந்து வரும் நிலையில் ஈரான் நாட்டில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள் மூலம் ரஷ்யா உக்ரேனை அடுத்தடுத்து இரண்டு இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதனால் மீண்டும் மக்கள் பீதியில் உறைந்தனர். சமீபத்தில் ரஷ்யா வெளியிட்டுள்ள தகவல்படி ’’டார்கெட் அனைத்தும் ஹிட்’’ என கூறியிருந்தது. மேலும் போர் தளவாடங்கள் காலியானதாகவும் கூறப்பட்டது. இதனால் பின்வாங்கப்படலாம் என யூகிக்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது ரஷ்யா
எரிசக்தி உள்கட்டமைப்பை குறி வைத்து இந்த தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளது. கடந்த திங்கள் கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் மீண்டும் புதன் கிழமை காலை அடுத்தடுத்து இரண்டு தாக்குதல்களை நடத்தியுள்ளது .