உக்ரைனில் அடுத்தடுத்து மீண்டும் குண்டுகள் வெடிப்பு….

ரஷ்யா அடுத்தகட்ட போர் திட்டங்கள் குறித்து அறிவிப்புகள் வெளி வந்துள்ள நிலையில் உக்ரைன் நாட்டின் கீவ்  நகரில் அடுத்தது 2 பலத்த குண்டுகள் வெடித்ததால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ரஷ்யா- உக்ரைன் போர் நடந்து வரும் நிலையில் ஈரான் நாட்டில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள் மூலம் ரஷ்யா உக்ரேனை அடுத்தடுத்து இரண்டு இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளது.


இதனால் மீண்டும் மக்கள் பீதியில் உறைந்தனர். சமீபத்தில் ரஷ்யா வெளியிட்டுள்ள தகவல்படி ’’டார்கெட் அனைத்தும் ஹிட்’’ என கூறியிருந்தது. மேலும் போர் தளவாடங்கள் காலியானதாகவும் கூறப்பட்டது. இதனால் பின்வாங்கப்படலாம் என யூகிக்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது ரஷ்யா

எரிசக்தி உள்கட்டமைப்பை குறி வைத்து இந்த தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளது. கடந்த திங்கள் கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் மீண்டும் புதன் கிழமை காலை அடுத்தடுத்து இரண்டு தாக்குதல்களை நடத்தியுள்ளது .

Next Post

ஸ்கைவாக் வசதியுடன் புதிய ரயில் நிலையம் … எங்க அமைய போகுது தெரியுமா .?

Wed Oct 19 , 2022
சென்னை வண்டலூரை அடுத்துள்ள முக்கிய பகுதியில் ஸ்கைவாக் வசதியுடன் புதிய ரயில்நிலையத்தை அமைக்க உள்ளதாக போக்குவரத்து குழுமம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் தான் இந்த புதிய ரயில் நிலையம் அமைய உள்ளது. ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்குப்  பயணிகள் வந்து செல்ல வசதியாக கேளம்பாக்கத்தில் புறநகர் ரயில் நிலையம்அமைக்க தெற்கு ரயில்வேயிடம் சென்னை போக்குவரத்து குழுமம்அனுமதி கோரியிருக்கின்றது. ஒப்புதல் கிடைக்கும பட்சத்தில் பேருந்து நிலையம் மற்றும் புதிதாக கட்டப்பட உள்ள […]
கிளாம்பாக்கம் திட்டம்

You May Like