தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக முக்கியப் பிரமுகர்களின் வீடுகளைக் குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் இந்தப் போலி மிரட்டல்களால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும் தலைமை செயலகம், உயர்நீதிமன்றம், வானிலை மைய அலுவலகம், அதிமுக தலைமை அலுவலகம் முக்கிய இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.. எடப்பாடி பழனிசாமி, விஜய், சீமான், ஐஏஎஸ் அதிகாரிகள், இசைஞானி இளையராஜா என முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது..
பெரும்பாலும் இமெயில் மூலம் விடுக்கப்படும் இந்த மிரட்டல்களை தொடர்ந்து சம்மந்தப்பட்ட இடங்களில் காவல்துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள் ஆகியோர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.. சோதனையின் முடிவில் அவை வெறும் புரளி என்பது உறுதியாகி வருகிறது.
இந்த நிலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பாக டிஜிபி அலுவலகத்திற்கு இ-மெயில் வந்த நிலையில் அவரின் வீட்டில் சோதனை மேற்கொள்ள போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சென்றனர்.. எனினும் ரஜினிகாந்தின் வேண்டுகோளை ஏஏற்று போலீசார் அங்கு சோதனை நடத்தவில்லை. 2 வாரங்களுக்கு முன்பு, இதே போல் ரஜினி காந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பின்னர் போலீசார் நடத்திய சோதனையில் அது வெறும் புரளி என்பது தெரியவந்தது..
Read More : ரூ.65,000 விலையில் சிறந்த மைலேஜ் பைக்.. ஃபுல் டேங்கில் 700 கி.மீ. தூரம் பயணிக்கலாம்!



