ஜிஎஸ்டி அலுவகலம், வானிலை ஆய்வு மையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. தீவிர சோதனை!

bomb threat

சென்னையில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகம் மற்றும் வானிலை ஆய்வு மைய அலுவலகத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்களின் வீடுகள், அரசு அலுவலகங்கள், தலைமைச் செயலகம் போன்ற முக்கியமான இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.. எனினும் சோதனைக்கு பிறகு அவை வெறும் புரளி என்பது தெரியவரும்..


இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் மகாத்மா காந்தி சாலையில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகம் மற்றும் வானிலை ஆய்வு மைய அலுவலகத்திற்கு இன்று கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.. இதை தொடர்ந்து அலுவலகத்தில் உள்ள அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்..

ஜிஎஸ்டி அலுவலகம் மற்றும் வானிலை ஆய்வு மைய அலுவலகத்திற்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

RUPA

Next Post

வெப்ப அலை பேரழிவை எதிர்கொள்ளும் உலகின் பழமையான நாடு! நூற்றுக்கணக்கானோர் பலி; ஏசியை பயன்படுத்தாத மக்கள்.. ஏன்?

Mon Sep 22 , 2025
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஜப்பான் வேகத்தில் முன்னேறி, விரைவாக தொழில்நுட்பத்தின் தலைவராக மாறியது. இருப்பினும், ஜப்பானும் அதன் சமூகமும் தொடர்ந்து வளர்ச்சிக்கு அழுத்தம் கொடுத்ததால், அவர்கள் சில அம்சங்களில் பின்தங்கியுள்ளனர். தற்போது, ​​ஜப்பான் ஒரு புதிய நெருக்கடியைச் சந்தித்து வருகிறது, இது காலநிலை மாற்றம் மற்றும் அதன் வயதான மக்கள்தொகை காரணமாக ஏற்படுகிறது. 84 வயதான தோஷியாகி மோரியோகாவின் வீட்டில் ஒரு எச்சரிக்கை சாதனம் உள்ளது. வெப்பநிலை மற்றும் […]
japan heatwave

You May Like