சென்னை மாதவரம் அருகே நடித்துக்காட்டுவதற்காக தூக்கிட்டுக் கொண்ட 11 வயது சிறுவன் எதிர்பாராதவிதமாக உயிரிழந்த சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாதவரம் அருகே புழல் புத்தகரம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன் . இவருடைய இளைய மகன் கார்த்திக் . 11 வயதாகும் கார்த்திக் அரசு மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். கார்த்திக்கும் இவரது அண்ணனும் தூக்குபோட்டு விளையாடியுள்ளனர். விளையாட்டாக எப்படி தூக்கிட்டுக் கொள்வது என்பது போல நடித்துக் காண்பித்துக்கொண்டிருந்தான். அப்போது கார்த்திக் மின்விசிறியில் சேலையில் தூக்கிட்டு நடித்துக் காட்டியுள்ளான்.
எதிர்பாமால் கார்த்திக் சுருக்கிட்ட சேலையை கழற்ற முடியவில்லை இதனால் கழுத்து இறுக்கப்பட்டு உயிரிழந்தான். வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த அண்ணன் தன் வீட்டின் அருகே வேலை செய்திருந்த நபரை அழைத்துள்ளான். அவர் வந்து பார்த்தபோது விபரீதமான சம்பவம் தெரியவந்துள்ளது. உடனடியாக கழற்றி படுக்க வைத்துள்ளார். ஆனால் மூச்சு நின்றுவிட்டது.
அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.