ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.
அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்றூ காலை ரூ.2400 உயர்ந்த நிலையில் தற்போது மேலும் ரூ.2800 உயர்ந்துள்ளது.. அதன்படி ஒரு சவரன் தங்கம் விலை மாலையில் ரூ. 2,800 உயர்ந்து ரூ.1,24,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று காலை கிராமுக்கு ரூ.300 உயர்ந்த நிலையில் தற்போது ரூ.350 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,550க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை இன்று ஒரே நாளில் காலை, மாலை என மொத்தம் ரூ.5200 உயர்ந்துள்ளது..
அதே போல் இன்று வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.. அதன்படி இன்று காலை ஒரு கிராம் வெள்ளி ரூ.5 உயர்ந்து நிலையில் தற்போது ரூ. 20 உயர்ந்து ரூ.320க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.20,000 உயர்ந்து ரூ.3.20 லட்சத்திற்கு விற்பனையாகிறது. தங்கம் வெள்ளி விலை இன்று அதிரடியாக விலை உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..



