Breaking : அதிமுகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது..! யார் யார் எந்த தொகுதியில் போட்டி..? அனல்பறக்கும் தேர்தல் களம்..!

ADMK Chief secretary Edappadi Palanisamy 2 1

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக, ராமதாஸ் – சசிகலா அணி என 5 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.. 


அந்த வகையில் நேற்று முன் தினம் தொகுதி பங்கீட்டை அதிமுக இறுதி செய்தது.. மேலும் அதிமுகவின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இந்த நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.. முதல்கட்டமாக 23 பேர் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதிமுகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல்

எடப்பாடி – எடப்பாடி பழனிசாமி

திண்டுக்கல் – திண்டுக்கல் சீனிவாசன்

நத்தம் – நத்தம் விஸ்வநாதன்

மயிலம் – சி.வி சண்முகம்

கலசபாக்கம் – அக்ரி கிருஷ்ணமூர்த்தி

பாலக்கோடு – கே.பி. அன்பழகன்

விராலிமலை – சி. விஜயபாஸ்கர்

ராயபுரம் – ஜெயகுமார்

நன்னிலம் – காமராஜ்

வேப்பனஹள்ளி – கே.பி.முனுசாமி

தொண்டாமுத்தூர் – எஸ்.பி.வேலுமணீ

குமாரபாளையம் – பி. தங்கமணி

மதுரை – செல்லூர் ராஜு

வேதாரண்யம் – ஓ.எஸ். மணியன்

கோவில்பட்டி : கடம்பூர் ராஜு

திருமங்கலம் – ஆர்.பி. உதயகுமார்

சிவகாசி – கே.டி. ராஜேந்திர பாலாஜி

மதுரவாயல் – பெஞ்சமின்

திருப்பரங்குன்றம் – வி.வி. ராஜன் செல்லப்பா

பவானி – கே.சி. கருப்பணன்

ஜோலார்பேட்டை – கே.சி. வீரமணி

கரூர் – எம்.ஆர். விஜயபாஸ்கர்

அரியலூர் – தாமரை எஸ். ராஜேந்திரன்

2021 தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த சி.வி. சண்முகம் இந்த முறை மயிலம் தொகுதியில் போட்டியிடுகிறார்.. அதே போல் ராஜபாளையத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்த ராஜேந்திர பாலாஜி சிவகாசி தொகுதியில் களமிறங்குகிறார்..

Read More : Breaking : மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய தங்கம் விலை..! ஒரே நாளில் ரூ.2800 உயர்வு.. வெள்ளி ரூ.10,000 உயர்வு..!

RUPA

Next Post

இந்தியாவில் மீண்டும் லாக்டவுன்..? பிரதமர் மோடியின் பேச்சால் மக்கள் குழப்பம்.. உண்மை என்ன..?

Wed Mar 25 , 2026
கோவிட்-19 காலகட்டத்தைப் போன்று தயார்நிலையில் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கடந்த திங்கள்கிழமை கூறியிருந்தார்.. அவரின் இந்த கருத்து ‘ஊரடங்கு’ (Lockdown) என்பது இணையப் பயனர்கள் மத்தியில் ஒரு முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. இது மக்களிடையே ஆர்வத்தையும் அச்சத்தையும் தூண்டியுள்ளது; இதன் விளைவாக, பலரும் ‘ஊரடங்கு செய்திகள்’ மற்றும் ‘இந்தியாவில் மீண்டும் ஊரடங்கா?’ போன்ற தகவல்களை இணையத்தில் தேடி வருகின்றனர்.. திங்களன்று மக்களவையில் மேற்கு ஆசிய மோதல் […]
india lockdown

You May Like