BREAKING | தமிழ்நாட்டில் மீண்டும் அதிர்ச்சி..!! தலைக்குப்புற கவிழ்ந்த பேருந்து..!! ஒருவர் உயிரிழப்பு.. 5 பேர் கவலக்கிடம்..?

accident

தமிழ்நாட்டில் சமீபகாலமாக தொடர்கதையாகி வரும் பேருந்து விபத்துகள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து நிகழும் இத்தகைய கோர விபத்துகளில் அப்பாவிப் பயணிகள் உயிரிழப்பது வேதனையளிக்கும் விஷயமாக மாறியுள்ளது. அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே இன்று அதிகாலை நிகழ்ந்த ஒரு தனியார் பேருந்து விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் இருந்து கரூர் நோக்கி 16 பயணிகளுடன் ஒரு தனியார் ஆம்னி பேருந்து புறப்பட்டுச் சென்றது. இந்தப் பேருந்து உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. அதிவேகமாகச் சென்ற பேருந்து சாலையின் மையப்பகுதியில் இருந்த தடுப்புச் சுவரில் பயங்கரமாக மோதி, நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில், பேருந்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜியாவுதீன் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், பேருந்தில் பயணம் செய்த 5-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்தனர். விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்தாரா அல்லது பேருந்தின் வேகமே விபத்துக்குக் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது

Read More : உங்கள் மகளின் திருமண கவலையை தீர்க்கும் ஜாக்பாட் திட்டம்..!! வட்டி மட்டுமே ரூ.50,00,000 கிடைக்கும்..!!

CHELLA

Next Post

FLASH | பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா..? தொடங்கியது ரயில் டிக்கெட் முன்பதிவு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Sun Jan 4 , 2026
தமிழர்களின் பாரம்பரியப் பெருவிழாவான தைப்பொங்கலைத் தங்களது சொந்த ஊர்களில் குடும்பத்துடன் கொண்டாடத் திட்டமிட்டுள்ள மக்களுக்கு, தெற்கு ரயில்வே ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படவுள்ள சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (ஜனவரி 4) காலை 8 மணி முதல் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தென் மாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டலங்களை நோக்கிப் படையெடுப்பது வழக்கம். ஏற்கனவே […]
train new

You May Like