Breaking : தொடர் கனமழை எதிரொலி.. சென்னை, திருவள்ளூரில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை..!

rain school holiday

நேற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் வடதமிழகம் புதுவை தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில், நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று காலை வடதமிழக – புதுவை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுக்குறைந்தது..


இது, அடுத்த 24 மணி நேரத்திற்கு காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுக்குறையக்கூடும். மேலும் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது..

இந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை மாவட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.. அதே போல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த 2 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More : பெண்களுக்கு மிகப்பெரிய குட்நியூஸ்..! 2026க்குள் சமையல் எண்ணெய் விலை குறையப் போகுது! எவ்வளவு தெரியுமா?

RUPA

Next Post

பெண்கள் எந்த நாட்களில் தலைக்கு குளிப்பது நல்லது..? எந்த நாட்களில் கூடாது..?

Thu Dec 4 , 2025
On which days is it good for women to take a head bath? On which days is it not good for women to take a head bath?
bathing

You May Like