ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.
அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.
இந்த சூழலில் இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,720 குறைந்து ரூ.1,04,000க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் சென்னையில் இன்று மாலை ஆபரண தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.250 அதிகரித்து ரூ.13,250-க்கு விற்அனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.2000 உயர்ந்து ரூ.1,06,000க்கு விற்பனையாகிறது.. அதே போல் வெள்ளி விலையும் இன்று மாலை உயர்ந்துள்ளது.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.10 உயர்ந்து ரூ.250க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ ரூ. 10,000 உயர்ந்து வெள்ளி ரூ. 2.50 லட்சத்திற்கு விற்பனையாகிறது.
ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக கடந்த 10 நாட்கள் தங்கம் விலை குறைந்து வந்தது.. குறிப்பாக நேற்று ஒரே நாளில் ரூ. 7,600 குறைந்த நிலையில் இன்றும் ரூ.2720 குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் தொடர் சரிவில் இருந்த தங்கம் விலை இன்று மாலை மீண்டும் உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..



