ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.
அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. குறிப்பாக தங்கம் விலை ரூ.85,000ஐ கடந்து புதிய உச்சத்தை தொட்டது.. கடந்த வாரமும் தங்கம் விலை உயர்வதும் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது..
இந்த நிலையில் இன்று காலை ரூ.880 உயர்ந்த நிலையில் தற்போது மாலையில் ரூ.520 உயர்ந்துள்ளது.. அதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.65 உயர்ந்து, ரூ.11,125க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.89,000க்கு விற்பனையாகிறது.. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. இன்று ஒரே நாளில் 1400 உயர்ந்துள்ளது.
அதே போல் இன்று காலை விலை ரூ.1 உயர்ந்த நிலையில் தற்போது மாலையும் வெள்ளி விலை உயர்ந்துள்ளது.. அதன்படி ஒரு கிராம் ரூ.1 உயர்ந்து ரூ.167க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோ ரூ.1,67,000 விற்பனையாகிறது.
Read More : Breaking : பீகாருக்கு 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல்.. தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்!