தங்கம் விலை இன்று ஒரே நாளில் காலை ரூ.240 மாலை ரூ.480 என மொத்தம் ரூ. 720 உயர்ந்துள்ளது.
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.
அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. அந்த வகையில் கடந்த வாரத்தின் தொடக்கத்திலும் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது.. இதனால் கடந்த வாரம் தங்கம் விலை ரூ.85,000ஐ கடந்து புதிய உச்சத்தை தொட்டது.. இந்த வாரத்திலும் திங்கள், செவ்வாய் என 2 நாட்களிலும் தங்கம் விலை உயர்ந்தது..
இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. அதன்படி இன்று காலை சென்னையில் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ரூ.10,890க்கு விற்பனை செய்யப்பட்டது… இதனால் ஒரு சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.87,120க்கு விற்பனையானது.
இந்த சூழலில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை 2வது முறை உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் தங்கம் விலை ரூ.60 உயர்ந்து ரூ.10,950க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ. 87,600க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை இன்று காலை ரூ.240 மாலை ரூ.480 என 720 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. எனினும் இன்று வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை… அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ. 1 உயர்ந்து, ரூ.161 க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ ரூ.1,61,000 விற்பனையாகிறது.
Read More : மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு.. குட்நியூஸ் சொன்ன அரசு!



