Breaking : குட்நியூஸ்! ஒரே நாளில் ரூ.2,000 குறைந்த தங்கம் விலை..! வெள்ளி விலையும் சரிவு! நகைப்பிரியர்கள் நிம்மதி!

gold price prediction

சென்னையில் தங்கம் விலை இன்று ஒரு சவரனுக்கு ரூ.2,000 குறைந்து ரூ.95,600-க்கு விற்பனையாகிறது..

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. குறிப்பாக தங்கம் விலை ரூ.86,000-ல் இருந்து தற்போது ரூ.92,000ஐ தொட்டுள்ளது.. அதே போல் கடந்த வாரமும் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது.. ஓரிரு நாட்கள் மட்டுமே விலை குறைந்தது..

இந்த நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி தங்கம் விலை, ஒரு கிராமுக்கு ரூ.250 குறைந்து, ரூ.11,950-க்கு விற்பனையாகிறது.. அதே போல் இன்று ஒரு சவரனுக்கு ரூ.2,000 குறைந்து ரூ.95,600-க்கு விற்பனையாகிறது.. தங்கம் விலை நேற்று ஒரே நாளில் ரூ.2400 உயர்ந்த நிலையில் இன்று 2000 குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.. மேலும் இன்று தன திரியோதசி நாள் என்பதால் பலரும் தங்கம் வாங்குவார்கள்.. எனவே இன்றைய விலை குறைவு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதே போல் இன்று வெள்ளி விலை குறைந்துள்ளது. அதன்படி இன்று காலை ஒரு கிராம் வெள்ளி ரூ. 13 குறைந்து ரூ.190-க்குவிற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,90,000 விற்பனை செய்யப்படுகிறது.

Read More : தன திரியோதசி 2025 : செல்வம் பெருக இன்று தங்கம், வெள்ளி வாங்க சிறந்த நேரம் எது? முழு விவரம் இதோ..

English Summary

Gold prices in Chennai today fell by Rs. 2,000 per sovereign and are being sold at Rs. 95,600.

RUPA

Next Post

இந்திரனின் சாபமே பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படக் காரணமாம்!. புராணங்கள் என்ன சொல்கின்றன?.

Sat Oct 18 , 2025
பெண்கள் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். மாதவிடாய் ஒரு சாபத்தால் தோன்றியது என்பது உங்களுக்குத் தெரியுமா? மாதவிடாய்க்குப் பின்னால் உள்ள புராணக் கதையை ஆராய்வோம். இந்த நேரத்தில், பெண்கள் தாங்க முடியாத வலியை எதிர்கொள்வது மட்டுமல்லாமல், மத நடவடிக்கைகள், பிரார்த்தனைகள் மற்றும் பிற சடங்குகளில் ஈடுபடுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது. இது பெண்களுக்கு ஒரே ஒரு கேள்வியை மட்டுமே எழுப்புகிறது: அவர்களுக்கு மாதவிடாய் ஏன் ஏற்படுகிறது? சாபத்தின் விளைவாக மாதவிடாய் தொடங்கியது […]
Indra women menstruate

You May Like