Breaking : கனமழை எதிரொலி.. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..

Rain School 2025

நேற்று (30-11-2025) தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழகம் -புதுவை கடலோரப்பகுதிகளில் நிலவிய “டிட்வா” புயல், நேற்று 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்தது.. இது, அடுத்த 12 மணி நேரத்துக்கு, வடதமிழகம் புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு இணையாக வடதிசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து. தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அப்பொழுது, சென்னையிலிருந்து குறைந்தபட்ச தூரமானது 30 கிலோமீட்டராகவும் இருக்கக்கூடும்.


இந்த நிலையில் சென்னை, திருவள்ளூருக்கு விடுக்கப்பட்ட ஆரஞ்ச் அலர்ட் தற்போது ரெட் அலர்ட்டாக மாறி உள்ளது.. அதன்படி, சென்னையில் இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. அதே போல் திருவள்ளூர் மாவட்டத்திலும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. மேலும் ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

நாளையும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

இந்த நிலையில் நாளை சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்..

அதே போல் திருவள்ளூர் மாவட்டத்திற்கும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்..

Read More : Breaking : கனமழை எதிரொலி.. நாளை சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

RUPA

Next Post

19 வயது இளைஞருடன் உல்லாசமாக இருந்த மேஸ்திரி மனைவி..!! நேரில் பார்த்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

Mon Dec 1 , 2025
கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதியில் சமீபத்தில் பாதி எரிந்த நிலையில் கிடந்த வாலிபர் உடலை மீட்டுப் போலீஸார் நடத்திய விசாரணையில், அது கள்ளக்காதலுக்காக மனைவி நடத்திய கொடூர கொலை என்பது அம்பலமாகியுள்ளது. யாதகிரி மாவட்டத்தை சேர்ந்த பசவராஜ் மற்றும் சரணம்மா தம்பதியினர், பெங்களூருவில் வாடகை வீட்டில் தங்கி, கட்டிடத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தனர். கட்டிட மேஸ்திரியின் மகன் வீரபத்ரா, பசவராஜ் தம்பதியினரை வேலைக்கு வாகனத்தில் அழைத்துச் சென்றபோது, சரணம்மாவுக்கும் […]
Crime 2025

You May Like