தங்கம் விலை இன்று ஒரு சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.90,400க்கு விற்பனையாகிறது..
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.
அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. குறிப்பாக தங்கம் விலை ரூ.86,000ஐ கடந்து புதிய உச்சத்தை தொட்டது.. கடந்த வாரமும் தங்கம் விலை உயர்வதும் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது..
இந்த நிலையில் இன்று காலையும் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, ரூ.11,300க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.90,400க்கு விற்பனையாகிறது.. தங்கம் விலை கடந்த 3 நாட்களில் ரூ.2800 உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..
அதே போல் இன்று வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் ரூ.3 உயர்ந்து ரூ.170க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோ ரூ.1,70,000 விற்பனையாகிறது.