ஆப்பிரிக்க நாடான கென்யாவில், தற்போது கடும் வறட்சி காணப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாகவே கென்யாவில் மழை பொழிவு சரிவர இல்லை. இதனால் பல்வேறு பகுதிகளில் உணவு உற்பத்தி பாதித்துள்ளது. இந்த நிலையில், இந்த ஆண்டிலும் மழை பொழிவு சராசரி அளவை விட கீழே இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால் கென்யாவில் நிலவும் வறட்சி குறித்து சமீபத்தில் சில தன்னார்வ அமைப்புகள் ஆய்வில் ஈடுபட்டன. தற்போது அவற்றின் முடிவுகள் வெளியாகி உள்ளன. அதில் கென்யாவில் அடுத்த மாதம் முதல் – மே மாதங்களில் 15 மாகாணங்கள் கடுமையான உணவுத் தட்டுப்பாட்டை சந்திக்க இருப்பதாகவும், இதனால் சுமார் 1 கோடி மக்கள் வரை பட்டினியால் பாதிக்கக் கூடும் என தெரிவித்துள்ளது.
குறிப்பாக வஜிர், மந்திரா, கார்சியா , துர்கானா, மர்சபிட், இசியோலோ, போன்ற பகுதிகள் கடுமையான வறட்சியை சந்திக்க உள்ளன. இதனால் சுமார் 40 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு அவசரமான மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் உலகத் தலைவர்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்காமல் இருந்தால் அதிக மக்கள் பசியால் இறக்க நேரிடும் என தன்னார்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.