fbpx

இன்றுமுதல் 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி!… 50000 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்

Exam: தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்றுமுதல் தொடங்க உள்ளது. தில் சுமார் 50000 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1-ல் தொடங்கி 22-ம் தேதி வரையும், பிளஸ் 1 பொதுத் தேர்வுமார்ச் 4-ல் தொடங்கி 25-ம் தேதி வரையும் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி அன்று முடிவடைந்தது. இத்தேர்வை சுமார் 9.10 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.

இந்தநிலையில் இன்றுமுதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்க உள்ளது. இதுகுறித்து தேர்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது, ஏப்ரல் 22-ம் தேதி வரை நடைபெறும் விடைத்தாள் திருத்தும் பணிக்காக, தமிழகம் முழுவதும் 88 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. விடைத்தாள் திருத்தும் பணியில் சுமார் 50 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தொடர்ந்து, மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து, திட்டமிட்டபடி மே 10-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடைத்தாள் திருத்தும்போது ஆசிரியர்கள் உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி கவனத்துடன் செயல்பட வேண்டும். தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி விடைத்தாள்களை அதற்குரிய ஆசிரியர்கள் மட்டுமே திருத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Readmore: தமிழகத்தை ரவுண்டு கட்டும் தேசிய தலைவர்கள்!… மோடியை தொடர்ந்து ராகுல்!… நெல்லையில் இன்று பிரசாரம்!

Kokila

Next Post

Zoho நிறுவன ஸ்ரீதர் வேம்புவுக்கு மத்திய அரசு கொடுத்த புது பதவி...!

Fri Apr 12 , 2024
Zoho நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவை பல்கலைக்கழக மானியக் குழுவின் உறுப்பினராக மத்திய அரசு நியமித்தது. ஸ்ரீதர் வேம்பு ஆளும் பாஜக அரசு மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆதரவை கொண்டவர். ஸ்ரீதர் வேம்புவுடன், தேசிய பங்குச் சந்தையின் எம்டி மற்றும் சிஇஓ ஆஷிஷ் குமார் சவுகான், தேசிய கல்வித் திட்டமிடல் மற்றும் நிர்வாகக் கழகத்தின் துணைவேந்தர் சசிகலா குலாப்ராவ் வஞ்சாரி, மத்தியப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சச்சிதானந்த மொஹந்தி ஆகியோர் […]

You May Like