fbpx

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி மாற்றம்..? அரசுக்கு வலுக்கும் கோரிக்கை..!! ஏன் தெரியுமா..?

10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வெளியிட்டார்.

அதன்படி, 10ஆம் வகுப்பிற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 23 முதல் 29 ஆம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறவுள்ளது. 11ஆம் வகுப்பிற்கு பிப்ரவரி 19 முதல் 24ஆம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெறவுள்ளது. 12ஆம் வகுப்பிற்கு பிப்ரவரி 12 முதல் 17 ஆம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெறவுள்ளது.

10ஆம் வகுப்பிற்கு அடுத்த ஆண்டு மார்ச் 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை பொதுத் தேர்வுகள் நடைபெறவுள்ளது. 11ஆம் மாணவர்களுக்கு மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி வரையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்தாண்டு ஏப்ரல் 1ஆம் தேதி நடைபெற உள்ள 10ஆம் வகுப்பு கணித தேர்வு தேதி மாற்ற வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தேர்வுக்கு முன்பு புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை வர உள்ளதால் தேர்வு தேதியை மாற்ற வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

Chella

Next Post

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்ற 62 பேராசிரியர்களுக்கு தகுதியில்லை..!! அதிரடி நீக்கம்..!!

Thu Nov 16 , 2023
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செயல்பட்டு வரும் அண்ணாமலை பல்கலைக்கழகம் கடந்த 2012ஆம் ஆண்டில் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியதைத் தொடர்ந்து, அந்த பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தை தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொண்டது. இதையடுத்து, அந்த பல்கலைக்கழகத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஊழல் புகார்கள், முறைகேடாக நியமிக்கப்பட்டவர்கள், பேராசிரியர் நியமனத்தில் விதிமீறல் என ஏற்கனவே இருந்த புகார்கள் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் […]

You May Like