திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடி அருகே உள்ள செ.ஆண்டப்பட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (45), கூலித் தொழிலாளி. இவரது இரண்டாவது மகள் சந்தியா (15) தானிப்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 5ம் தேதி சந்தியா வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது திடீரென சந்தியா தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு தீக்குளித்தார்.
இவரின் அலரல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி சந்தியா பரிதாபமாக இறந்தார்.
இச்சம்பவம் குறித்து மாணவியின் தந்தை சக்திவேல் அளித்த புகாரின் பேரில் தானிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை செய்து கொண்டனர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.