fbpx

#திருவண்ணாமலை: 10ம் வகுப்பு மாணவி தீக்குளிப்பு.. இதுதான் காரணமா..!

திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடி அருகே உள்ள செ.ஆண்டப்பட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (45), கூலித் தொழிலாளி. இவரது இரண்டாவது மகள் சந்தியா (15) தானிப்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 வகுப்பு படித்து வந்தார். 

கடந்த 5ம் தேதி சந்தியா வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது திடீரென சந்தியா தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு தீக்குளித்தார். 

இவரின் அலரல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி சந்தியா பரிதாபமாக இறந்தார். 

இச்சம்பவம் குறித்து மாணவியின் தந்தை சக்திவேல் அளித்த புகாரின் பேரில் தானிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை செய்து கொண்டனர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Baskar

Next Post

வழக்கமாக எதிர்க்கட்சிகளைதான் ஓடவிடுவார்..!! இந்த முறை ஆளுநரையே ஓடவிட்டுள்ளார்..!! உதயநிதி ஸ்டாலின்

Tue Jan 10 , 2023
தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றியபோது, திராவிட மாடல், அமைதிப்பூங்கா உள்ளிட்ட சில வார்த்தைகளை பேசாமல் தவிர்த்தார். பின்னர், சபாநாயகர் அப்பாவு வாசித்த தமிழாக்கத்தில் அந்த வார்த்தைகள் இடம்பெற்றன. தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காதது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. ஆளுநருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், முதலமைச்சர் முக.ஸ்டாலின் பேசிக்கொண்டிருக்கும்போதே பேரவையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்தார். இந்த விவகாரம் தமிழ்நாடு […]

You May Like